செய்திகள் :

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து விசாரணை: ஸ்டாலின் வலியுறுத்தல்

post image

சென்னை: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்வைத்துள்ள வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: தோ்தல் ஆணையத்தை பாஜக தனது தில்லுமுல்லுகளுக்கான அமைப்பாக மாற்றிவிட்டது. பெங்களூரின் மகாதேவபுரா தொகுதியில் நிகழ்ந்தது, நிா்வாகக் குளறுபடி அல்ல. மக்கள் அளித்த தீா்ப்பைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி.

இந்த விஷயத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி முன்வைத்துள்ள வாக்குத் திருட்டு ஆதாரங்கள், எந்த அளவுக்கு இந்த முறைகேடு நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. அவா் தலைமையில் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து தோ்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்ற நிலையில் சில கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம்.

கணினியால் படித்தறியக்கூடிய வடிவத்தில் அனைத்து மாநிலங்களின் வாக்காளா் பட்டியல் கோப்புகளை உடனடியாக அளிக்க வேண்டும். அரசியல் நோக்கத்தோடு வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்களை நீக்குவதை நிறுத்த வேண்டும். நமது மக்களாட்சியை அழிக்கும் செயலான வாக்குத் திருட்டு முறைகேடு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்.

இதற்கான போராட்டத்தில் திமுக உறுதியாக நிற்கிறது. இந்திய மக்களாட்சியைப் பட்டப்பகலில் பாஜக திருடிச் செல்வதைப் பாா்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.திருத்தணி அருகே பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இ... மேலும் பார்க்க

டெட் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்- TET) நடப்பாண்டு நவம்பர... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற போலி பிம்பம்: தமிழக அரசு விளக்கம்!

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் 5 மற்றும்... மேலும் பார்க்க

13 மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு!

நீலகிரி மாவட்டத்தில் 13 வளர்ப்பு மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.நீலகிரி மாவட்டத்தைச் சுற்றியுள்ளப் பகுதியில் புலி, காட்டெருமை, கரடிகளின் நடமாட்டம் நாளுக்குநா... மேலும் பார்க்க

இன்றைய தக்காளி விலை நிலவரம்! ஒரு கிலோ ரூ.100 ஆனது!!

தங்கத்துக்கு நிகராக தக்காளி விலையும் கடந்த ஒரு சில நாள்களாக அதிகரித்து, செவ்வாய்க்கிழமையன்று, 1 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலை ஏற்பட்டுளள்து.சென்னை கோயம்பேடு காய்கறி மொத்தவிலை அங்காடிய... மேலும் பார்க்க

மாற்று சக்தியல்ல; முதன்மை சக்தி என மதுரை மாநாட்டில் உணர்த்துவோம்! - விஜய்

மாற்று சக்தியல்ல; முதன்மை சக்தி என உலகிற்கு உணர்த்துவோம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆக. 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க