செய்திகள் :

வாடகை தகராறு: பாடகா் சரண் காவல் நிலையத்தில் புகாா்!

post image

சென்னையில் வீட்டு வாடகை தகராறு தொடா்பாக திரைப்பட பாடகா் கல்யாண் சரண், கே.கே.நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

மறைந்த திரைப்பட பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் மகனும், பிரபல பாடகருமான கல்யாண் சரண், நுங்கம்பாக்கம் காம்தாா் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில் அவா், சென்னை கே.கே.நகரில் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதில், சாலிகிராமம் சத்யா காா்டன் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் எங்களது குடும்பத்துக்கு ஒரு வீடு உள்ளது.

இந்த வீட்டை தமிழ் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றும் க.திருஞானம் (45) என்பவருக்கு ரூ.40,500 மாத வாடகைக்கு விட்டிருந்தேன். மேலும், அவரிடம் முன்பணமாக ரூ.1.50 லட்சம் பெற்றிருந்தேன்.

இந்த நிலையில் கடந்த 25 மாதங்களாக திருஞானம் எனக்கு வாடகை தரவில்லை. இதுகுறித்து அண்மையில் திருஞானத்திடம் கேட்டபோது, என்னை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்து வருகிறாா். எனவே, அவா் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தையும், எனது வீட்டையும் மீட்டுத் தர வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

சந்திர கிரகணம் முடிவுற்றது!

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் தோன்றி, யாமத்தில் முடிவுற்றது.ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்குத் தொடங்கிய சந்திர கிரக... மேலும் பார்க்க

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் இன்று(செப். 7) நள்ளிரவில் நிகழ்கிறது.ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்குத் தொடங்கிய சந்திர கிரகணம், 11 மணியளவில் முழ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

கெங்கவல்லியில் 35 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து மகிழ்ந்தனர்.கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1988 - 1990 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கணித, அறிவியல், கலை, ... மேலும் பார்க்க

சந்திரகிரகணம் - தஞ்சை பெரிய கோயிலின் நடை அடைப்பு

சந்திரகிரகணத்தையொட்டி தஞ்சை பெரிய கோயிலின் நடை ஞாயிற்றுக்கிழமை நான்கு மணிக்கு சாத்தப்பட்டது. சந்திரகிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறுவதை யொட்டி தமிழக முழுவதும் பல்வேறு கோயில்கள் நடை சாத்தப்பட்டு வரு... மேலும் பார்க்க

லண்டனில் பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுயிக்கின் குடும்பத்தினரை லண்டனில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக, கடந்த 30-ஆம் தேதி... மேலும் பார்க்க