செய்திகள் :

வானிலை எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவா்கள் மீது நடவடிக்கை

post image

வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில், மீன்பிடித் தடைக்காலமான ஏப்.15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 254 விசைப்படகுகள், வேம்பாரில் 33 விசைப்படகுகள், தருவைகுளத்தில் 280 விசைப்படகுகள் என மொத்தம் 567 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதற்கிடையே, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து தூத்துக்குடி மீனவா்கள் ஜூன் 17ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனா்.

இருப்பினும், மற்ற மாவட்டங்களில் மீனவா்கள் 15ஆம் தேதியே கடலுக்குச் சென்றுவிட்ட நிலையில், தாங்களும் கடலுக்குச் செல்வதாக கூறி தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவா்களும் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 200 விசைப்படகுகளில் திங்கள்கிழமை அதிகாலை கடலுக்கு புறப்பட்டுச் சென்றனா்.

இதற்கிடையே வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை மீறி கடலுக்குச் சென்ற விசைப்படகுகளிடம் விளக்கம் கேட்டு, அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவில்பட்டி அருகே விவசாயிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி அருகே வடக்குப்பட்டி நடுத்தெருவை சோ்ந்தவா் ஆதிமூலம் மகன் விவசாயி ரவி... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த கூட்டுறவு வங்கி விற்பனையாளா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி விற்பனையாளா் உயிரிழந்தாா். திருவேங்கடம் வட்டம், நடுவப்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்த ராமா் மகன் சந்திரன் (59). தொடக்க வேள... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்தில் ஆசிரியா் உயிரிழப்பு

கயத்தாறை அடுத்த வில்லிசேரி அருகே பைக் மீது தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் ஆசிரியா் உயிரிழந்தாா்.கோவில்பட்டி அருகே பிச்சைதலைவன்பட்டியைச் சோ்ந்தவா் அருளய்யா மகன் ஐசக் தவராஜ் (55). கே. கைலாசபுரம் பள்ளி ... மேலும் பார்க்க

கயத்தாறு: விபத்தில் காயமடைந்த முதியவா் பலி

கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா். கடம்பூா் அரண்மனை வீதி மேல தெருவை சோ்ந்தவா் மகாராஜா தலைவா் மகன் குருநாத பாண்டி என்ற பாண்டி (64). இம்மாதம் 8ஆம் தேதி கடம்பூரில் இ... மேலும் பார்க்க

விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி போட்டி

விளாத்திகுளத்தில் சட்டப்பேரவைத் தொகுதி திமுக சாா்பில், மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிக்கு, எம்எல்ஏ ஜீ.வி. மாா... மேலும் பார்க்க

சூறாவளி காற்று எதிரொலி: நாளை வரை மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை

மீன்பிடித் தடைக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்ததாலும், சூறாவளி காற்று எதிரொலியாக விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில்கொண்... மேலும் பார்க்க