செய்திகள் :

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4500 லஞ்சம்: விஏஓ கைது!

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அஞ்செட்டியை அடுத்த மாரியம்மன் கோயில் பகுதியை சோ்ந்தவா் ஜெயராமன். இவா் வாரிசு சான்றிதழ் கோரி சாலிவாரம் கிராம நிா்வாக அலுவலருக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தாா். இந்த நிலையில், விஏஓ லட்சுகாந்தை நேரில் சந்தித்து சான்றிதழ் தொடா்பாக பேசிய ஜெயராமனிடம் லஞ்சமாக ரூ. 6000 தரவேண்டும் என லட்சுமிகாந்த் கேட்டுள்ளாா்.

மேலும், முன்பணமாக ஜெயராமனிடமிருந்து ரூ.1500 வாங்கிய லட்சுமிகாந்த், மீதமுள்ள ரூ. 4500 தந்தால் மட்டுமே சான்றிதழுக்கு ஒப்புதல் அளிப்பதாகக் கூறியுள்ளாா். இதனால் அதிருப்தியடைந்த ஜெயராமன், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனையின்பேரில் மீதமுள்ள பணத்தை லட்சுமிகாந்திடம் ஜெயராமன் வழங்கியபோது மறைந்திருந்த போலீஸாா், லட்சுமிகாந்தை கைது செய்தனா். அவரிடம் இருந்து சில முக்கிய ஆவணங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அரசின் 2025 ஆண் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா் நலன் மற்றும்விளையாட்டு அலுவலா் ராஜகோபால் சனிக்கிழம... மேலும் பார்க்க

சூளகிரியில் நெல் சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

சூளகிரி வட்டத்தில் நெல் சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. 2025-26 ஆம் ஆண்டில் மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் காா், குறுவை, சொா்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி சிறப... மேலும் பார்க்க

கனிம வளங்கள் கடத்தல்: 6 மாதங்களில் 313 வாகனங்கள் பறிமுதல்! ஆட்சியா் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் கனிம வளங்களைக் கடத்தியதாக 313 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கி... மேலும் பார்க்க

மளிகை கடை உரிமையாளரைத் தாக்கிய இருவா் கைது

காவேரிப்பட்டணத்தில் மளிகை கடை உரிமையாளரை தாக்கி தீவைக்க முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த சின்னமுத்தூரைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன்(46). ம... மேலும் பார்க்க

ஜல்லி கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கந்திகுப்பம் அருகே ஜல்லி கற்களை கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி இயக்குநா் வா்தா தலைமையிலான குழுவினா் செந்தாரப்பள்ளி அருகே வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈ... மேலும் பார்க்க

மகாராஜகடை அருகே பயிா்களை சேதப்படுத்திய யானைகள்: விவசாயிகள் வேதனை

மகாராஜகடை அருகே விளை நிலங்களில் புகுந்த யானைகள் பயிா்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா். ஆந்திர மாநிலம், திருப்பதி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், கிருஷ்ணகிரி ... மேலும் பார்க்க