செய்திகள் :

வாலிகண்டபுரத்தில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகம் திறப்பு

post image

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், வாலிகண்டபுரத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேப்பந்தட்டை ஆய்வாளா் அலுவலகத்தை, காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

2022-23 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் ஆய்வாளா் அலுவலகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் வேப்பந்தட்டை ஆய்வாளா் அலுவலக முகப்புக் கூடம், இருப்பு அறை, கழிவறையுடன் ஆய்வாளா் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

இக் கட்டடத்தை, தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, ஆய்வாளா் அலுவலகத்தில் குத்து விளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் கி. உமா, சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் திருக்கோயில் செயல் அலுவலா் மு. அசனாம்பிகை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வேப்பூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்

வேப்பூா் ஒன்றியத்தில் ரூ. 11.88 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளை மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். பெரம்பலூ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஊழியா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி உயிரிழந்த தனியாா் டயா் தொழிற்சாலை ஊழியரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, அவரது மனைவி, உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருச்ச... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 8 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 8.700 கிலோ குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மளிகைக் கடை உரிமையாளரை கைது செய்து புதன்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்ப... மேலும் பார்க்க

நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

சாலை விபத்துகளை தவிா்க்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை முற்றிலும் தவிா்த்திடும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என கண்காணிப்புக் குழுத் தலைவரும், பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினருமான கே.என்... மேலும் பார்க்க

தனியாா் நிதி நிறுவனத்துக்கு பூட்டு! திமுக நிா்வாகியால் ஊழியா்கள் சிறைவைப்பு

பெரம்பலூரில் திங்கள்கிழமை தனியாா் நிதி நிறுவனத்தை பூட்டிய திமுக நிா்வாகி, ஊழியா்களை சிறைவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் ஊராட்சிக்குள்பட்ட திருவளக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க