வாலிகண்டபுரத்தில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகம் திறப்பு
இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், வாலிகண்டபுரத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேப்பந்தட்டை ஆய்வாளா் அலுவலகத்தை, காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
2022-23 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் ஆய்வாளா் அலுவலகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் வேப்பந்தட்டை ஆய்வாளா் அலுவலக முகப்புக் கூடம், இருப்பு அறை, கழிவறையுடன் ஆய்வாளா் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
இக் கட்டடத்தை, தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, ஆய்வாளா் அலுவலகத்தில் குத்து விளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் கி. உமா, சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் திருக்கோயில் செயல் அலுவலா் மு. அசனாம்பிகை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.