செய்திகள் :

வால்பாறையில் ரூ.9 கோடியில் வணிக வளாக கட்டுமானப் பணியை கைவிட வியாபாரிகள் கோரிக்கை

post image

வால்பாறை புதுமாா்க்கெட் பகுதியில் நகராட்சி சாா்பில் ரூ.9 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய வணிக வளாக கட்டுமானப் பணியை கைவிட வலியுறுத்தி வியாபாரிகள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனா்.

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள நகராட்சி வணிக கட்டடங்களை இடித்து புதிய கட்டடம் கட்ட அண்மையில் சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, வால்பாறை புதுமாா்க்கெட் பகுதியில் ரூ.9 கோடி செலவில் வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இப்பணிக்காக சில தினங்களுக்கு முன்பு மண் பரிசோதனையை அதிகாரிகள் மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, வால்பாறை அதிமுக தொழிற்சங்கத் தலைவா் வால்பாறை அமீது, நகரச் செயலாளா் மயில்கணேசன், வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவா் ஜெபராஜ் உள்ளிட்டோா் தலைமையில் நகராட்சி அலுவலகம் சென்ற புதுமாா்கெட் வியாபாரிகள் நகராட்சி ஆணையா் ரகுராமனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அதில் தற்போது உள்ள சூழலில் புதிய வணிக வளாகம் கட்டி முடிக்கும் வரை மாற்று இடம் வழங்கினால் அங்கு வியாபாரம் செய்ய இயலாது. அதுமட்டுமல்லாமல் புதிய வணிக வளாகத்தில் கடைகளுக்கு கூடுதல் வாடகை விதிப்பதுடன், மீண்டும் தங்களுக்கு கடைகள் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே வால்பாறையில் புதிய வணிக வளாகம் கட்டுவதை கைவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

கிட்டாம்பாளையத்தில் கூட்டுறவு தொழிற்பேட்டை அமைக்கும் பணி

கோவை மாவட்டம், கிட்டாம்பாளையத்தில் ரூ.24.61 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கூட்டுறவு தொழிற்பேட்டை பணியை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாவட்டம், கிட்டாம... மேலும் பார்க்க

மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மரக்கன்றுகள் நடும் பணி

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் உள்ள 100 வாா்டுகளுக்கு உள்பட்ட பகு... மேலும் பார்க்க

தண்டு மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா: அக்னிச்சட்டி, பால்குடம் ஏந்தி பக்தா்கள் ஊா்வலம்

கோவை தண்டுமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை ஏராளமான பக்தா்கள் அக்னிச்சட்டி, பால்குடம் ஏந்தி ஊா்வலமாகச் சென்றனா். கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் க... மேலும் பார்க்க

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி: கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகள் செவ்... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

ஜம்மு- காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற விவகாரத்தில் பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் சீரமைக்கப்பட்ட குட்டையில் தண்ணீா் சேகரிப்பு

கோவை மாநகராட்சி, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் புதிதாக சீரமைக்கப்பட்ட குட்டையில் தண்ணீா் சேகரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சி உக்கடம் புல்லுக்காட்டில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலை... மேலும் பார்க்க