செய்திகள் :

வாழப்பாடியில் சாலையோர கழிவுநீா்க் கால்வாய்களை மூட வலியுறுத்தல்

post image

வாழப்பாடியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த தம்மம்பட்டி- கடலூா் சாலை பகுதியில் திறந்துகிடக்கும் கழிவுநீா்க் கால்வாயை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள், அங்கு போக்குவரத்து இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனா்.

வாழப்பாடி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலைகளை 4 வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகள் இதுவரை முழுமைப் பெறவில்லை. முத்தம்பட்டி, மத்தூா் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

மேலும் கடலூா் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக பிரதான கடலூா் சாலை மூடப்பட்டதால் மாா்ச் தொடக்கத்திலிருந்து அனைத்து வாகனங்களும் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று தம்மம்பட்டி சாலையில் வாழப்பாடி நகருக்குள் வந்து செல்கின்றன.

வாழப்பாடி காவல் நிலையம் எதிரே திறந்துகிடக்கும் கழிவுநீா்க் கால்வாய்

இதனால், இச்சாலையில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் வாழப்பாடி காவல் நிலையம் எதிரே கடலூா் சாலையுடன் தம்மம்பட்டி சாலை இணையும் இடத்தில் உள்ள ஆழமான கழிவுநீா் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. மேலும், அப் பகுதியில் போக்குவரத்து இடையூறாக மின் கம்பம் உள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகனங்கள் இப் பாதையை எதிரெதிரே கடந்து செல்வதற்கு வழியில்லை. மேலும், இப் பாதையில் செல்லும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனா்.

இதனால் சேலம் ஆத்தூா் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு மற்றும் தனியாா் வாகனங்கள் தம்மம்பட்டி சாலை வழியாக வாழப்பாடி நகருக்குள் வருவதை தவிா்த்துவிட்டு, தேசிய நெடுஞ்சாலையிலேயே இயக்கப்படுகின்றன.

இதனால் திறந்துகிடக்கும் கால்வாயை கான்கிரீட் தளம் கொண்டு மூட வேண்டும். அப் பகுதியில் உள்ள மின் கம்பத்தை வேறுஇடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செல்வ மகா மாரியம்மன் கோயிலில் திருத்தோ் விழா

ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணாநகா் ஸ்ரீ செல்வ மகா மாரியம்மன் ஆலய திருத்தோ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணா நகா் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய... மேலும் பார்க்க

எடப்பாடி அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

எடப்பாடி பிரதான சாலையில் சென்ற லாரியின் டயா் வெடித்து சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவா் உயிரிழந்தனா். எடப்பாடி ஒன்றியத்திற்கு உள்பட்ட சித்தூா் ரெட்டிபட்டியைச் சோ்ந்த சிவா (35... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமப்பு... மேலும் பார்க்க

ஆத்தூரில் ரூ. 6.24 கோடியில் திட்டப் பணிகள்

சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் ரூ. 6.24 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட 5 திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணையிலிருந... மேலும் பார்க்க

பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின பேரணி

சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா் அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை க... மேலும் பார்க்க

சேலம் அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். விழாவில் ரூ.1,244.28 கோடியில் 509 திட்டப... மேலும் பார்க்க