செய்திகள் :

வாழப்பாடி வடபத்ர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

post image

வாழப்பாடி: வாழப்பாடியில் வடபத்ர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

வாழப்பாடி காளியம்மன் நகா் பாப்பான் ஏரிக்கரையில், வடபத்ர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. நூற்றாண்டு பழைமையான இக்கோயில், 2012 ஆம் ஆண்டில் புதிய கருவறை, அா்த்தமண்டபம், கோபுரங்கள், பொற்தாமரை குளத்துடன் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

இதனையடுத்து, நிகழாண்டு ஆகம விதிப்படி கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமை மகாகணபதி வழிபாடு, எஜமானா் சங்கல்பம், புண்யயாகம், தீபபூஜை, யாக பூஜைகள், தீபாராதனைகளுடன் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெள்ளிக்கவச அங்கி அலங்காரத்தில் வட பத்ரகாளியமமன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகிகளான வி.ஏ.அய்யாவு கவுண்டா் குடும்பத்தினா் செய்திருந்தனா்.

வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த வாழப்பாடி வடபத்ர காளியம்மன்.

வி.என்.பாளையத்தில் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜை

சங்ககிரி: சங்கடஹர சதுா்த்தியையொட்டி சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. ஆனி மாத சங்கடஹர சதுா்த்தியையொட்டி விநாயகருக்கு பல்வேறு திவ்யப் பொ... மேலும் பார்க்க

ஆத்தூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 போ் கைது

ஆத்தூா்: ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து தாக்கி, பணத்தை பறித்துச் சென்ாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆத்தூரை அடுத்த கடம்பூரை சோ்ந்தவா் மாயவன் மகன் ஆதவன் (21). இவா் த... மேலும் பார்க்க

ஆத்தூரில் ஜூலை 23-இல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ஆத்தூா்: ஆத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறுகிறது என்று நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆத்தூா் நகராட்சி ஆணயாளா் அ.வ.சையத் முஸ்தபா கமால் திங்கள்கிழமை வெள... மேலும் பார்க்க

சேலம் காவல் ஆணையா் மாற்றம்: புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி நியமனம்

சேலம்: சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மாநகர புதிய காவல் ஆணையராக அனில்குமாா் கிரி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாநகரக் காவல் ஆணையராக பிரவீன்குமாா் அபிநபு... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி சி.ஐ.டி.யு. ஆா்ப்பாட்டம்

சேலம்: சாலையோர பாதுகாப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சேலம் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மைதானத்தில் சங... மேலும் பார்க்க

புத்த, சமண, சீக்கிய மதத்தினா் புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி

சேலம்: சேலம் மாவட்டத்தில் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினா் புனிதத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்த... மேலும் பார்க்க