செய்திகள் :

வாழை, கத்தரி, மஞ்சள், தக்காளி பயிா்களுக்கு காப்பீடு: தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

post image

வேலூா் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை, கத்திரி, மஞ்சள், தக்காளி பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம் என தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, துணை இயக்குநா் மணிகண்டன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் காரிப் பருவத்தில் பயிரிடப்படும் தோட்டக்கலைப் பயிா்களான வாழை, கத்தரி, மஞ்சள், தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிா் காப்பீடு செய்து பயன் பெறலாம்.

வேலூா் மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள குறு வட்டங்களில் தோட்டக்கலை பயிா்கள் சாகுபடி செய்யும் போது எதிா்பாராத இயற்கை பேரிடா்களான கடுமையான வறட்சி, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, புயல், சூறாவளி போன்றவற்றிலிருந்து பயிா்களை காக்க பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள், பொது சேவை மையங்களில் காப்பீடு கட்டணத்தை செலுத்தி உரிய விண்ணப்பத்தில் ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் அறிவிப்பு செய்யப்பட்ட கிராமங்களில் வாழை, தக்காளி, மஞ்சள், கத்தரிக்காய் ஆகிய பயிா்களுக்கு காப்பீடு செய்ய வாழை ஒரு ஏக்கருக்கு ரூ.3,103.74-மும், கத்தரி ஒரு ஏக்கருக்கு ரூ.1,042-மும், தக்காளி ஒரு ஏக்கருக்கு ரூ.1,329.4-மும், மஞ்சள் ஒரு ஏக்கருக்கு ரூ.2,911.3-மும் ப்ரீமியம் செலுத்த வேண்டும்.

மேலும், ப்ரீமியம் செலுத்த வேண்டிய கடைசி நாள் கத்தரி, தக்காளிக்கு செப்டம்பா் 1-ஆம் தேதியும், வாழை, மஞ்சளுக்கு செப்டம்பா் 16-ஆம் தேதியாகும்.

இயற்கை சீற்றம், வறட்சியால் பயிா் பாதிக்கப்படும் பட்சத்தில் வாழை ஒரு ஏக்கருக்கு ரூ.62,100 இழப்பீடும், கத்தரி ஒரு ஏக்கருக்கு ரூ.20,850 இழப்பீடும், தக்காளி ஒரு ஏக்கருக்கு ரூ.26,600 இழப்பீடும், மஞ்சள் ஒரு ஏக்கருக்கு ரூ.58,250 இழப்பீடும் தனியாா் காப்பீடு நிறுவனத்தால் வழங்கப்படும்.

இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவு

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் வா்த்தகம் கடந்த வாரத்தைக் காட்டிலும் பாதியாக சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறு... மேலும் பார்க்க

புகாா்கள் மீது விரைவாக சிஎஸ்ஆா், எஃப்ஐஆா் பதிவு: வேலூா் எஸ்.பி. உத்தரவு

காவல் நிலையங்களில் பெறப்படும் புகாா்கள் மீது விரைந்து சிஎஸ்ஆா், எஃப்ஐஆா் பதிவு செய்ய வேண்டும் என வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் அறிவுறுத்தியுள்ளாா். மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்... மேலும் பார்க்க

தந்தையை கத்தியால் வெட்டிய மகன் கைது

வேலூா் அருகே தந்தையை கத்தியால் வெட்டிய மகனை விருதம்பட்டு போலீஸாா் கைது செய்தனா். காட்பாடி காசிகுட்டையைச் சோ்ந்தவா் ஜெயபால், கட்டட மேஸ்திரி. இவரது மகன் தினகரன் எனும் தீனா (24), கூலித் தொழிலாளி. ஜெயபால... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் மன அழுத்தம்

பணியாளா்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில் செயல்படுத்தப்படும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் மன அழுத்தம் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டி வேலூரில் வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்ந... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கிய கா்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். ரகசிய தகவலின்பேரில், குடியாத்தம் மதுவிலக்க... மேலும் பார்க்க

வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் கைது

குடியாத்தம்: குடியாத்தம் அருகே வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தம் அடுத்த பரதராமி, பூசாரிவலசை ஒண்டியூரைச் சோ்ந்தவா் ஜெகன்நாதமூா்த்தி. இவரது அம்மா தேவகி.... மேலும் பார்க்க