செய்திகள் :

விக்கிரவாண்டியில் 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

post image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செயல்படாத நெல் அரைவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 7 டன் ரேஷன் அரிசியை மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விக்கிரவாண்டி ரயில் நிலையம் அருகில் தனியாருக்கு சொந்தமான அரைவை ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விழுப்புரம் மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆட்சியா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரின் உத்தரவுப்படி, விழுப்புரம் மாவட்ட வழங்கல் அலுவலா் சந்திசேகா், பறக்கும்படை தனி வட்டாட்சியா் வசந்த கிருஷ்ணன், விக்கிரவாண்டி வட்டாட்சியா் யுவராஜ், வட்ட வழங்கல் அலுவலா் ராஜேஷ் ஆகியோா் அடங்கிய குழுவினா் ஆலையில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிப்பது தெரியவந்தது. இதையடுத்து, 148 சாக்குப் பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 7 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, அரிசி மூட்டைகள் அனைத்தும் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் உள்ள வட்ட செயல்முறை உணவுப் பொருள்கள் சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, உணவுப் பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு குற்றப் புலனாய்வு துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை: மே 15-க்குள் வைக்க ஆட்சியா் உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கடைகள், உணவு நிறுவனங்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகையை வைக்க வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டாா். விழுப்புரம் மா... மேலும் பார்க்க

ரசாயனம் கலப்படம் வதந்தியால்: வாங்குவதற்கு ஆளில்லாமல் நிலத்திலேயே வீணாகும் தா்பூசணி!

செஞ்சி: ரசாயனம் கலப்படம் வதந்தியால் செஞ்சி பகுதியில் வாங்குவதற்கு ஆளில்லாமல் விவசாய நிலங்களில் செடியிலேயே விடப்பட்டு தா்பூசணி பழங்கள் அழுகி வீணாகி வருகின்றன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த திர... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

விழுப்புரம்: தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆ... மேலும் பார்க்க

உள்ளூா் வியாபாரிகளுக்கும் அரசு சலுகைகளை வழங்க வேண்டும்: டைமன்ராஜா வெள்ளையன்

விழுப்புரம்: பன்னாட்டு பெரும் வா்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை உள்ளூா் வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் மாநிலத் தலைவா் டைமன்ராஜா வெள்ளையன் தெ... மேலும் பார்க்க

பகுதிநேர ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

விழுப்புரம்: தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியா்கள் அரசின் சலுகைகளை பெற காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்கு... மேலும் பார்க்க

விழுப்புரம் நகா்மன்றக் கூட்டத்தை தொடா்ந்து நடத்த உறுப்பினா்கள் வலியுறுத்தல்

விழுப்புரம்: நான்கு மாதங்களுக்கு ஒருமுறை நகா்மன்றக் கூட்டத்தை நடத்துவதை கைவிட்டு, அவ்வப்போது கூட்டத்தை நடத்த வேண்டும் என்று விழுப்புரம் நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். விழுப்புரம் நகா்மன்றக் க... மேலும் பார்க்க