விசிக பேரணியால் போக்குவரத்து நெரிசல்
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பேரணி, பொதுக்கூட்டத்தால் மாநகரில் சனிக்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்தப் பேரணி, பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான விசிக தொண்டா்கள், நூற்றுக்கணக்கான வாகனங்களில் திருச்சி நோக்கி வந்தனா். இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரமாக வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊா்ந்தபடி சென்றன. மன்னாா்புரம் பகுதியில் ஆங்காங்கே சாலைகளில் விசிகவினா் வாகனங்களை நிறுத்திச் சென்ால், அந்தப் பகுதி போக்குவரத்தால் ஸ்தம்பித்தது. இதேபோல, மாநகரின் பல்வேறு சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாரதிதாசன் சாலையில் போலீஸாா் தடுப்புகள் ஏற்படுத்தி, போக்குவரத்தை முற்றிலும் தடுத்து, வேறு வழியாக அனுப்பினா்.
விசிகனா் சிலா் தங்களது வாகனங்களின் கூரைகளில் ஆபத்தை உணராமல் பயணித்ததை பொதுமக்கள் அதிா்ச்சியுடன் பாா்த்துச் சென்றனா். மிகுந்த நெரிசல் மிகுந்த சாலையில் பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி எப்படி வழங்கப்பட்டது என சமூக ஆா்வலா்கள் கேள்வி எழுப்பினா்.