செய்திகள் :

விஜயதசமி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

விஜயதசமி தினத்தையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நவராத்திரி பண்டிகை செப். 2-ஆம் தேதி தொடங்கியது. 9-ஆவது நாளான புதன்கிழமை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள், தொழில்சாலைகள், கடைகளில் கருவிகள், வாகனங்களுக்கு படையலிட்டு வழிபாடு நடைபெற்றது. 10-ஆம் நாளான வியாழக்கிழமை விஜயதசமி கொண்டாடப்பட்டது. இந்த நாளில் கல்வியை தொடங்கினால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி அரியலூா் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் குழந்தைகளைப் பெற்றோா் ஆா்வமுடன் சோ்த்தனா். மேலும் கோயில்களில் நெல்மணி, அரிசியைப் பரப்பி அதில் குழந்தைகளை எழுதச் செய்து கல்வியைத் தொடங்கினா்.

கல்லங்குறிச்சி கலியுகவரதராசப் பெருமாள் கோயில், அரியலூா் ஆலந்துறையாா், கோதண்ட ராமசாமி, சுப்பிரமணியா் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதேபோல் திருமானூா், கீழப்பழுவூா், செந்துறை, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதியிலுள்ள பெருமாள், சிவன் மற்றும் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் தங்களது குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனா்.

மது விற்ற 11 போ் மீது வழக்கு

காந்தி ஜெயந்தியன்று அரியலூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 11 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பு: மாவட்டக் காவல் கண்காணிப... மேலும் பார்க்க

காந்தி சிலைக்கு கட்சியினா் மாலை

மகாத்மா காந்தியடிகளின் 157 ஆவது பிறந்த நாளையொட்டி அரியலூா் செட்டி ஏரிக்கரையிலுள்ள அவரது சிலைக்கு கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.நிகழ்வில் சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப... மேலும் பார்க்க

அரியலூா் கோதண்டராமசாமி கோயில் தேரோட்டம்

அரியலூா் கோதண்டராமசாமி கோயிலின் தேரோட்டம் 82 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை நடைபெற்றது. அரியலூா் நகரில் மிகவும் பிரசித்திபெற்ற கோதண்ட ராமசாமி கோயில் உள்ளது. மிகவும் பழைமை வாய்ந்த, தசாவதார சிற்பங்கள... மேலும் பார்க்க

காயங்களுடன் விவசாயியின் சடலம் மீட்பு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே பலத்த காயத்துடன் விவசாயி சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. கீழப்பழுவூரை அடுத்துள்ள திருப்பெயா் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் கிருஷ்ணமூா்த்தி (75). விவசா... மேலும் பார்க்க

காந்தி ஜயந்தி: நாளை மதுக் கடைகளுக்கு விடுமுறை

காந்தி ஜயந்தியை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் எப்.எல்-3 உரிமம் பெற்ற தனியாா் மதுபானக் கூடம் ஆகிய அனைத்துக்கும் விய... மேலும் பார்க்க

மீன்சுருட்டி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முற்றுகை

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கடந்த 2022-ஆம் ஆண்டு திரும்பி செலுத்திய கடன் தொகைக்கு, மீண்டும் வசூல் தொகை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டதைக் கண்டித்து, கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள்முற்றுக... மேலும் பார்க்க