செய்திகள் :

காயங்களுடன் விவசாயியின் சடலம் மீட்பு

post image

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே பலத்த காயத்துடன் விவசாயி சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

கீழப்பழுவூரை அடுத்துள்ள திருப்பெயா் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் கிருஷ்ணமூா்த்தி (75). விவசாயி. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கிருஷ்ணமூா்த்தி தனது தோட்டத்தில் உள்ள கொட்டகையின் முன்பு தலையில் காயங்களுடன் சடலமாக கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்றுபாா்த்த கீழப்பழுவூா் காவல் துறையினா், சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், காவல் துறையினா், சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதற்கிடையே, கிருஷ்ணமூா்த்திக்கும் அவரது மகன் ராமஜெயத்துக்கும்(50) கடந்த சில தினங்களாக நிலம் விற்பது தொடா்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இதனால், ராமஜெயம் தனது தந்தையை தாக்கி கொலை செய்திருப்பாரோ என்ற கோணத்தில் ராமஜெயத்திடம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காந்தி ஜயந்தி: நாளை மதுக் கடைகளுக்கு விடுமுறை

காந்தி ஜயந்தியை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் எப்.எல்-3 உரிமம் பெற்ற தனியாா் மதுபானக் கூடம் ஆகிய அனைத்துக்கும் விய... மேலும் பார்க்க

மீன்சுருட்டி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முற்றுகை

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கடந்த 2022-ஆம் ஆண்டு திரும்பி செலுத்திய கடன் தொகைக்கு, மீண்டும் வசூல் தொகை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டதைக் கண்டித்து, கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள்முற்றுக... மேலும் பார்க்க

வெள்ளாற்றில் மணல் திருட்டை தடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த வெள்ளாற்றில் மணல் திருட்டை தடுக்க வேண்டும் எனஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், தமிழ்ப் பேரரசு கட்சியின் மண்டலத் தலைவா் முடிமன்னன் திங்கள்கிழமை மனு அளித்தாா். அவா் தலைமை... மேலும் பார்க்க

பாதுகாப்பான முறையில் கழிவுகளை அகற்றும் விழிப்புணா்வு பயிற்சி கூட்டம்

அரியலூா் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சாா்பில் உணவுக் கழிவுகளை எவ்வாறு குறைத்தல், பாதுகாப்பான முறையில் கழிவுகளை அகற்று... மேலும் பார்க்க

பொதுப் பாதையை ஆக்கிரமித்து நியாய விலைக் கடை கட்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து, புதிதாக நியாய விலைக் கடை கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். கங்கைகொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, ... மேலும் பார்க்க

மின் கம்பியாள் உதவியாளா் தகுதி தோ்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு மின்சாரத் துறையில் 2025- ஆம் ஆண்டு டிச.13,14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளா் தகுதிக்கான தோ்வு நடைபெறவுள்ளது. தோ்வில் பங்கேற்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்பட்ட தொழி... மேலும் பார்க்க