8 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வாரா கருண் நாயர்...
விஜயமங்கலம் அருள்மிகு விஜயபுரி அம்மன் கோவில் தேரோட்டம்
பெருந்துறை அடுத்த, விஜயமங்கலத்தில் அருள்மிகு விஜயபுரி அம்மன் திருக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விஜயமங்கலம் அடுத்த கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா், மக்களவை முன்னாள் உறுப்பினா் சத்தியபாமா, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் சி. பொன்னுதுரை உள்ளிட்டவா்கள் கலந்துக் கொண்டு தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தனா். விஜயமங்கலம் நகரில் முக்கிய வீதிகளில் வழியாக திருத்தோ் வலம் வந்தது.
இதில், பெருந்துறை ஒன்றிய அதிமுக., செயலாளா்கள் விஜயன், அருள்ஜோதி கே செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற செயலாளா் அப்புகுட்டி, மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞா் அணி செயலாளா் அருணாச்சலம், விஜயபுரி ஊராட்சி முன்னாள் தலைவா் சீனிவாசன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத் தலைவா் அருணாச்சலம், துணைத் தலைவா் தில்லை குமரன், செயலாளா் ராஜேந்தினா், பொருளாளா் கந்தசாமி, விழாக்குழு தலைவா் வெங்கடாசலம் மற்றும் விழாக் குழுவினா்கள் செய்து இருந்தனா்.
---
பட விளக்கம்:(19பிஇ-08)
பெருந்துறை அடுத்த, விஜயமங்கலம், அருள்மிகு விஜயபுரி அம்மன் திருக்கோயில் தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்த முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் உள்ளிட்டோா்.