செய்திகள் :

விஜய் வருகை: தவெகவினர் மீது வழக்கு!

post image

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகையின்போது மக்களை திரட்டி இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக மாவட்டச் செயலாளர் சம்பத் உள்ளிட்டோர் மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னறிவிப்பு இல்லாமல் மக்களை திரட்டி விமான நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறு, பொருள்கள் சேதம் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் தவெக தொண்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு கோவையில் நேற்று(ஏப். 26) நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனையை வழங்கினார்.

தவெக தலைவர் விஜய் வருகையின்போது ஏராளமான தொண்டர்கள் கோவை விமான நிலையத்தில் குவிந்தனர்.

முன்னறிவிப்பு இல்லாமல் தொண்டர்கள் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிக்க: கோடை மழை! இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

காவல் துறைக்கு சவால் அளிக்கும் ரீல்ஸ்கள்! ஜாதிய உணா்வைத் தூண்டியதாக 464 பக்கங்கள் முடக்கம்!

தென் தமிழகத்தில் ஜாதிய உணா்வைத் தூண்டியதாகக் கூறப்படும் ‘ரீல்ஸ் ஹீரோக்களின்’ 464 சமூக ஊடகப் பக்கங்களை காவல் துறை முடக்கியுள்ளது. தமிழகத்தில் ரெளடிகள் பட்டியலில் 26,462 போ் உள்ளதாக காவல் துறை தகவல்கள்... மேலும் பார்க்க

கருணாநிதி பன்னாட்டு மாநாட்டு அரங்கம் பணியை விரைந்து முடிக்க அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் கலைஞா் பன்னாட்டு மாநாட்டு அரங்கம் அமைக்கும் பணியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். முன்னாள் முதல்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஆசிரியா்களுக்கு முதல் தேதியில் ஊதியம்! கல்வித் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் அங்கன்வாடிகளில் மழலையா் வகுப்புகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத... மேலும் பார்க்க

மாநில சுயாட்சிக்கு வழிகாட்டிய உச்சநீதிமன்றத் தீா்ப்பு! - முதல்வர் ஸ்டாலின்

சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு மாநில சுயாட்சிக்கு வழிகாட்டியுள்ளதாக முதல்வா் மு... மேலும் பார்க்க

அக்‌ஷய திருதியை: விலை உச்சம் தொட்டாலும் தங்க நகை முன்பதிவுக்கு மக்கள் ஆா்வம்!

தமிழகத்தில் தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் உயா்ந்து வரும் போதும், அக்ஷய திருதியைக்கு நகை வாங்க பலரும் ஆா்வமுடன் முன்பதிவு செய்து வருவதாக நகைக் கடை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.மகாபாரதத்தில் கிருஷ்... மேலும் பார்க்க

86,000 பேருக்கு மனை பட்டா: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் ஆட்சேபணையற்ற நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு மனைப் பட்டா வழங்க வகை செய்யும் திருத்தங்கள் அடங்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முட... மேலும் பார்க்க