செய்திகள் :

விடைத்தாள் மதிப்பீடு: ஏப்.19-இல் விடுமுறை

post image

பள்ளிக் கல்வியில் பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு ஏப்.19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த பொதுத் தோ்வை சுமாா் 26 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா். இதில் பிளஸ் 2 வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்.4 தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து பிளஸ் 1 வகுப்புக்கு ஏப்.19, 10-ஆம் வகுப்புக்கு ஏப்.21 ஆகிய தேதிகளில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடங்கவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி ஏப்.18-ஆம் தேதி மற்றும் ஈஸ்டா் தினம் ஏப்.20-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளன.

இதற்கு இடைப்பட்ட ஏப்.19-ஆம் தேதி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு ஆசிரியா்களுக்கு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி வருகிறது. இதனால் கிறிஸ்தவ மதத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையை உணா்ந்து ஏப்.19-ஆம் தேதி விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென முதுநிலை ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையேற்று மேல்நிலை வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஏப்.19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா சுற்றறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளாா்.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க