செய்திகள் :

``விண்வெளியில் இருப்பது வித்தியாசமாக உள்ளது..'' - பிரதமர் மோடியிடம் பேசிய சுபான்ஷு சுக்லா!

post image

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, விண்வெளி துறையில் தனியாரின் பங்களிப்பை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் ஆக்ஸியம் ஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனம் ஆக்ஸியம்-4 திட்டத்தின் மூலம் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்க நாசா உதவுகிறது. இத்திட்டத்தில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் இணைந்துள்ளது.

விண்வெளியில் சுபன்ஷு சுக்லா
விண்வெளியில் சுபன்ஷு சுக்லா

டிராகன் விண்கலம் பூமியை சுற்றி 28 மணி நேர பயணத்திற்குப் பிறகு 26-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது. இதன் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை சுபான்சு சுக்லா படைத்தார். இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனான சுபான்சு சுக்லா, ஆக்ஸியம்-4 விண்வெளி திட்டத்தில் இடம் பெற்ற 4 விண்வெளி வீரர்களில் ஒருவர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி சனிக்கிழமை (ஜூன் 28) சுபன்ஷு சுக்லாவுடன் பேசினார். இந்த உரையாடலில், சுபான்ஷு சுக்லாவை பாராட்டிய பிரதமர் மோடி,``சுபான்ஷு சுக்லா நீங்கள் தாய்நாட்டிலிருந்து வெகு தூரத்தில் இருக்கலாம். ஆனால், இந்தியார்களின் இதயங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறீர்கள். நலமாக இருக்கிறீர்களா...?" என்றார்.

மோடி
மோடி

அதைத் தொடர்ந்து பேசிய சுபான்ஷு சுக்லா, ``பிரதமர் மோடி, உங்கள் அன்புக்கும் 140 கோடி இந்தியர்களின் அன்புக்கும் நன்றி. நான் இங்கே நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறேன். நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்.

இது ஒரு புதிய அனுபவம். இந்தப் பயணம் என்னுடையது மட்டுமல்ல, முழு தேசத்தின் பயணமும் ஆகும். உங்கள் தலைமையின் கீழ், இன்றைய இந்தியா அவர்களின் கனவுகளை நிறைவேற்ற ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. விண்வெளியில் உள்ள அனைத்தும் தரையில் பயிற்சி செய்வதிலிருந்து வித்தியாசமாக உணர்கிறது." என்றார்.

Canada: ``இதுதான் கனடாவின் ரியாலிட்டி'' - இந்திய பெண்ணின் வைரல் இன்ஸ்டா பதிவு

கனடாவில் ஒரு வேலைவாய்ப்பு முகாமில் 5 அல்லது 6 இன்டெர்ன்ஷிப் இடங்களுக்கு இந்தியர்களும், மற்ற வெளிநாட்டு மாணவர்களும் நீண்ட வரிசையில் நிற்பதை இந்தியப் பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்திருப்பது வைரல... மேலும் பார்க்க

Koomapatti: ``கூமாபட்டியில் ரூ.10 கோடியிலான பூங்கா'' - விருதுநகர் ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ்நாட்டின் காஷ்மீர் என திடீரென வைரலானது விருதுநகர் மாவட்ட கூமாபட்டி கிராமம். ஆனால் உண்மையில் அந்த கிராமத்தில் ஆறுகள் வறண்டு இருப்பதாகவும், இணையத்தில் பரவுவது பழைய வீடியோவாக இருக்கலாம் எனவும் கூறப்ப... மேலும் பார்க்க

Reliance: ``என் தந்தை என்னிடம் சொன்னதுதான் என் லட்சியம்" - மனம் திறந்த முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அதன் நிறுவனர்களுக்குப் பிறகும் இருப்பதை உறுதி செய்வதே என் மிகப்பெரிய லட்சியம் என முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: தாய் இல்லாத கன்றுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்.. நெகிழவைக்கும் சம்பவம்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜ் நகரை சேர்ந்தவர் பச்சையம்மாள். இவர் பசுமாடு ஒன்று வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றெடுத்த பின்னர் பசு மாடு இறந்த... மேலும் பார்க்க

``விருதுநகரே விடைபெறுகிறேன்!'' - ஆட்சியர் ஜெயசீலன் எழுதிய உருக்கமான கடிதம்!

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய முனைவர். வீ.ப.ஜெயசீலன் பணியிட மாற்றமாக பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதார இணை ஆணையராக செல்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக தான் பணியாற்றிய விருதுநகர் மாவட்ட மக... மேலும் பார்க்க

``Urine Eye Wash'' - வைரலாகும் பெண்ணின் பதிவு; ``கொடூரமானது'' - எச்சரிக்கும் மருத்துவர்

புனேயை சேர்ந்த நுபுர் என்ற பெண் தினமும் காலையில் தனது சிறுநீரில் கண்களை கழுவுவதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்க பதிவில் `Urine Eye Wash — Nature’s Own Med... மேலும் பார்க்க