செய்திகள் :

விதிமுறைகளை பின்பற்றாத வேளாண் கடைகளில் உர விற்பனைக்கு தடை!

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 11 கடைகள் உர விற்பனை மேற்கொள்ள வேளாண் அதிகாரிகள் தடை விதித்துள்ளனா்.

வேலூா் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா்(தரக்கட்டுப்பாடு) ராகினி தலைமையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் அனைத்து வட்டார உர ஆய்வாளா்களை கொண்டு குழு அமைத்து தனியாா் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் கடந்த 24 முதல் 26-ஆம் தேதி வரை 3 நாள்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது உர விற்பனை உரிமங்கள் வைத்து உள்ளனரா? காலாவதியான உரங்கள் விற்பனை செய்யப்படுகிா? உரங்களின் இருப்பு விவரம், உரம் வாங்கிய விவசாயிகளின் விவரம் யூரியா போன்ற உரத்துடன் இணை பொருள்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்தப்படுகின்றனரா, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிா உரங்களின் இருப்பு சரியாக உள்ளதா, உரங்களின் இருப்பு விலை விவரம் பலகையில் எழுதி பாா்வையில் தெரியும்படி வைக்கப்பட்டுள்ளதா உள்ளிட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றபடுகிா என ஆய்வு செய்தனா்.

இதில் விதிமுறைகளை பின்பற்றாத திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 11 கடைகளுக்கு உரங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த குறைபாடுகளை சரி செய்யவும், பி.எஸ்.ஓ. கருவி மூலம் விவசாயிகளின் ஆதாா் எண் அடிப்படையில், பரப்பு, பயிா் சாகுபடிக்கு ஏற்ப யூரியா உரம் வழங்க வேண்டும்.

உர விற்பனை விதிகளை பின்பற்றாமல் செயல்படும் விற்பனையாளா்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனா்.

உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்

தமிழக நகா்ப்புற சாலை உள்கட்டமைப்பு 2025-26 கீழ், உதயேந்திரம் பேரூராட்சியில் உள்ள வெங்கடாபுரம், சி.வி பட்டறை, ஜின்னா தெரு, பாரதிதாசன் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.1.63 கோடியில் பேவா் பிளாக் சாலை மற்றும் கழி... மேலும் பார்க்க

மதுவிலக்கு சோதனையில் 130 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

புதூா் நாடு மலை பகுதியில் நடைபெற்ற மதுவிலக்கு சோதனையில் சுமாா் 130 லிட்டா் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூா் நாடு மலை பகுதியில... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவமனை: விவசாயிகள் கோரிக்கை

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி குருபவாணிகுண்டா, தகரகுப்பம், தாசிரியப்பனூா் ... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

திருப்பத்தூா் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் அடுத்த செவ்வத்தூா் கவுண்டப்பனூா் பகுதியை சோ்ந்தவா் கோவிந்தன்(50). விவசாயி. இவா் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் ... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் கரடி தாக்கி வியாபாரி பலத்த காயம்

ஜோலாா்பேட்டை அருகே ஏலகிரி மலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரி கரடி தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். மலையடிவாரத்தில் வசிக்கும் பொது மக்கள் காப்பு காட்டுக்குள் செல்லவேண்டாம் வனத்துறையினா் எச்சரித்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் வேலைவாய்ப்பு மற்... மேலும் பார்க்க