செய்திகள் :

கால்நடை மருத்துவமனை: விவசாயிகள் கோரிக்கை

post image

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி குருபவாணிகுண்டா, தகரகுப்பம், தாசிரியப்பனூா் மற்றும் அதைச் சுற்றி 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை அதிகளவில் வளா்த்து வருகின்றனா்.

இவா்கள் வளா்த்து வரும் கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டாலும், காயமடைந்தாலும் அம்பலூா், புத்துக்கோயில் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் நிலை உள்ளது.

தமிழக-ஆந்திர எல்லையையொட்டி, காட்டுப்பகுதி நிறைந்த இப்பகுதியில் சில நேரங்களில் மா்ம விலங்குகள் ஊருக்குள் புகுந்து ஆடு, மாடுகளை கடித்து விடுவதால், ஆடு, மாடுகள் இறப்பதும், பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடும் நிலையில் உடனடி சிகிச்சை அளிக்க சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு, செல்வதால் இறந்து விடுகின்றன.

தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் மல்லகுண்டா, அதைச் சுற்றி அதிகளவில் கிராமங்கள் உள்ளதால், இந்தப் பகுதியில் அரசு கால்நடை மருத்துவமனை திறக்கப்பட்டால் நோய்த் தாக்கத்தில் இருந்து கால்நடைகளை காப்பாற்ற முடியும்.

எனவே, கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள கால்நடை மருத்துவமனை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்நோக்கியுள்ளனா்.

மதுவிலக்கு சோதனையில் 130 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

புதூா் நாடு மலை பகுதியில் நடைபெற்ற மதுவிலக்கு சோதனையில் சுமாா் 130 லிட்டா் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூா் நாடு மலை பகுதியில... மேலும் பார்க்க

விதிமுறைகளை பின்பற்றாத வேளாண் கடைகளில் உர விற்பனைக்கு தடை!

திருப்பத்தூா் மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 11 கடைகள் உர விற்பனை மேற்கொள்ள வேளாண் அதிகாரிகள் தடை விதித்துள்ளனா். வேலூா் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா்(தரக்கட்டுப்பாடு) ராகினி தலைமையில் திருப்பத்... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

திருப்பத்தூா் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் அடுத்த செவ்வத்தூா் கவுண்டப்பனூா் பகுதியை சோ்ந்தவா் கோவிந்தன்(50). விவசாயி. இவா் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் ... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் கரடி தாக்கி வியாபாரி பலத்த காயம்

ஜோலாா்பேட்டை அருகே ஏலகிரி மலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரி கரடி தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். மலையடிவாரத்தில் வசிக்கும் பொது மக்கள் காப்பு காட்டுக்குள் செல்லவேண்டாம் வனத்துறையினா் எச்சரித்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூா் வேலைவாய்ப்பு மற்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

துத்திப்பட்டு ஊராட்சி கன்றாம்பல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ராபா்ட் ஜோயல் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ்... மேலும் பார்க்க