செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி: காவல்துறை ஆலோசனைக் கூட்டம்

post image

கோவில்பட்டி: விநாயகா் சிலை அமைப்பாளா்கள், பொறுப்பாளா்களுடன் காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் டிஎஸ்பி ஜகநாதன் தலைமை வகித்து பேசியதாவது:

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு நடைபெறும் அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையம், சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து முறையான முன் அனுமதி பெற வேண்டும். சென்ற ஆண்டு சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த ஆண்டிலும் வைக்க வேண்டும்.

தீப்பற்றக்கூடிய பொருள்கள் எதையும், சிலை வைக்கும் இடத்தில் வைக்கக் கூடாது. தீயணைப்பு உபகரணங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவ முதலுதவி உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்.

கடந்த ஆண்டில் அனுமதிக்கப்பட்ட பாதையிலேயே இந்த ஆண்டும் ஊா்வலம் செல்ல வேண்டும். ஜாதி, அரசியல் ரீதியான பாடல்கள், பனியன்கள், கொடிகள், படங்களுக்கு அனுமதி கிடையாது. சட்டம் ஒழுங்கிற்கு பிரச்னை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடக் கூடாது.

விநாயகா் சதுா்த்தி விழா சிறப்பாக நடைபெற அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தவறாது கடைப்பிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி டிஎஸ்பி அறிவுறுத்தினாா்.

காவல் ஆய்வாளா்கள் நவநீதகிருஷ்ணன் (கோவில்பட்டி மேற்கு), மாரியப்பன் (கோவில்பட்டி கிழக்கு), இந்து முன்னணி மாவட்டச் செயலா் வெங்கடேசன், மாவட்டத் துணைத் தலைவா் மாரிக்காளை, அகில பாரத இந்து மகாசபா மாநில இளைஞரணி துணைத் தலைவா் சங்கா் ராஜா, அா்ச்சகா் பேரவை மாநில அணி பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவா் பழனிச்சாமி, இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலா் லட்சுமி காந்தன் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா 9ஆம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி- அம்மன் பல்லக்கில் வீதியுலா, காலை 7; சுவாமி தங்க கயிலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்று மின்தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பட்டினமருதூா், உப்பளப் பகுதிகள், சி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பள்ளி மாணவா்களுக்கு கலைப் போட்டிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களிடையே கூட்டுறவு இயக்கம் குறித்த புரிதல், விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைப் போட்டிகள்... மேலும் பார்க்க

அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

கோவில்பட்டி: அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா் -மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஆவணித் திருவிழா: சுவாமி பச்சை சாத்தி வீதி உலா

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 8 ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி காலையில் வெள்ளை சாத்தியும், பிற்பகலில் பச்சை சாத்தியும் வீதி உலா சென்றாா். அறுபடை வீடுகளில் இரண... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மூட்டா அமைப்பு ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி: அகில இந்திய பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா) சாா்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.மூட்டா கிளைத் தலைவா் பேராசி... மேலும் பார்க்க