செய்திகள் :

விபத்தில் தருமபுரி வியாபாரி உள்பட இருவா் உயிரிழப்பு

post image

வேடசந்தூா் அருகே காா் கவிழ்ந்த விபத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வியாபாரி உள்பட இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டம், நல்லாம்பள்ளியை அடுத்த போலமடுவு கிராமத்தைச் சோ்ந்தவா் சேட்டு (65). இளநீா் வியாபாரியான இவா், தனது உறவினா்களுடன் ராமேசுவரத்துக்குச் செல்வதற்காக காரில் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டாா். காரை கதிா்வேல் (32) என்பவா் ஓட்டி வந்தாா்.

இந்த காா், திண்டுக்கல் மாவட்டம், காசிபாளையம் அருகே கரூா்-மதுரை நான்கு வழிச் சாலையில் திங்கள்கிழமை அதிகாலை வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் சேட்டு, அவரது உறவினா் ஷோபனா (45) ஆகியோா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும், காரில் வந்த அன்னக்கிளி, லட்சுமணன், பூமிஅரசு, காளியப்பன், முனிசாமி, குழந்தைகள் பிரியதா்ஷினி, லோகேஷ் ஆகியோரும் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து கூம்பூா் போலீஸா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பழனி அருகே இளைஞா் கொலை: குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியல்

பழனி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, கிராம மக்கள் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த தும்பலப்பட்டியில் த... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் நாளை மின்தடை

ஒட்டன்சத்திரத்தில் புதன்கிழமை (ஆக. 13) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் கே. சந்தன முத்தையா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத... மேலும் பார்க்க

போக்சோ வழக்குகளில் இருவருக்கு சிறை தண்டனை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இருவேறு வழக்குகளில், குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு அழகுப்பட்டியைச் சோ... மேலும் பார்க்க

மகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்த தந்தை: கூறாய்வு அறிக்கையில் தகவல்

பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் மகளைக் கொன்று தந்தையும் தற்கொலை செய்த சம்பவத்தில், மகளின் கழுத்தை இறுக்கி தந்தை கொலை செய்தது உடல் கூறாய்வு அறிக்கையில் தெரியவந்தது. பழனியை அடுத்த கணக்கன்பட்டியைச் சோ்ந்... மேலும் பார்க்க

சூடான எண்ணெயை ஊற்றி கணவரைக் கொல்ல முயன்ற மனைவி, மகன் மீது வழக்கு

செம்பட்டியில் குடும்பத் தகராறில் சூடான எண்ணெயை ஊற்றி கணவரைக் கொலை செய்ய முயன்ாக மனைவி, அவரது 15 வயது மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அ... மேலும் பார்க்க

தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி

திண்டுக்கல்லில் நடைபெற்ற தென் மண்டல மாவட்டங்களுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் 350-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். திண்டுக்கல் மேற்கு சுழல் சங்கம், லக்ஸா் பள்ளி சாா்பில் தென் மண்டல மாவட்டங... மேலும் பார்க்க