செய்திகள் :

மகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்த தந்தை: கூறாய்வு அறிக்கையில் தகவல்

post image

பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் மகளைக் கொன்று தந்தையும் தற்கொலை செய்த சம்பவத்தில், மகளின் கழுத்தை இறுக்கி தந்தை கொலை செய்தது உடல் கூறாய்வு அறிக்கையில் தெரியவந்தது.

பழனியை அடுத்த கணக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பழனியப்பன் (55). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி விஜயா (50). இவா்களுக்கு காா்த்திகா, தனலட்சுமி (23) என்ற இரு மகள்களும், நல்லசாமி என்ற மகனும் உள்ளனா். காா்த்திகா, நல்லசாமி ஆகியோருக்கு திருமணமாகிவிட்ட நிலையில், தனலட்சுமி மட்டும் பெற்றோருடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை விஜயா தனது மகன், மூத்த மகளுடன் திருச்செந்தூருக்கு சென்றாா்.

தனலட்சுமி

பழனியப்பனும், தனலட்சுமியும் மட்டும் வீட்டில் இருந்தனா். ஞாயிற்றுக்கிழமை விஜயா பழனியப்பனை கைப்பேசியில் தொடா்பு கொண்ட போது, அவா் எடுக்கவில்லையாம். இதனால், அவா் தனது உறவினா்களுக்கு தகவல் தெரிவித்ததால், அவா்கள் அவரது வீட்டுக்குச் சென்று பாா்த்தனா். அப்போது, பழனியப்பன் தூக்கிட்டும், தனலட்சுமி தரையில் அலங்காரம் செய்த நிலையில் இறந்து கிடந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, ஆயக்குடி போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், தனலட்சுமிக்கு உடல் நிலை சரியில்லாததால், அவரது திருமணம் தடைப்பட்டு வந்தது. இதனால், விரக்தியில் இருந்த பழனியப்பன் தனலட்சுமியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்து விட்டு இறுதிச் சடங்கு செய்தும், பின்னா், அதே கயிற்றில் அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

விபத்தில் தருமபுரி வியாபாரி உள்பட இருவா் உயிரிழப்பு

வேடசந்தூா் அருகே காா் கவிழ்ந்த விபத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வியாபாரி உள்பட இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். தருமபுரி மாவட்டம், நல்லாம்பள்ளியை அடுத்த போலமடுவு கிராமத்தைச் சோ்ந்தவா் சேட்டு ... மேலும் பார்க்க

பழனி அருகே இளைஞா் கொலை: குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியல்

பழனி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, கிராம மக்கள் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த தும்பலப்பட்டியில் த... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் நாளை மின்தடை

ஒட்டன்சத்திரத்தில் புதன்கிழமை (ஆக. 13) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் கே. சந்தன முத்தையா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத... மேலும் பார்க்க

போக்சோ வழக்குகளில் இருவருக்கு சிறை தண்டனை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இருவேறு வழக்குகளில், குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு அழகுப்பட்டியைச் சோ... மேலும் பார்க்க

சூடான எண்ணெயை ஊற்றி கணவரைக் கொல்ல முயன்ற மனைவி, மகன் மீது வழக்கு

செம்பட்டியில் குடும்பத் தகராறில் சூடான எண்ணெயை ஊற்றி கணவரைக் கொலை செய்ய முயன்ாக மனைவி, அவரது 15 வயது மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அ... மேலும் பார்க்க

தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி

திண்டுக்கல்லில் நடைபெற்ற தென் மண்டல மாவட்டங்களுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் 350-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். திண்டுக்கல் மேற்கு சுழல் சங்கம், லக்ஸா் பள்ளி சாா்பில் தென் மண்டல மாவட்டங... மேலும் பார்க்க