செய்திகள் :

பழனி அருகே இளைஞா் கொலை: குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியல்

post image

பழனி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, கிராம மக்கள் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த தும்பலப்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இதில் தும்பலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மகுடீஸ்வரன் மகன் சரவணன் (23) கணக்காளராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் உள்ள நிறுவனத்துக்கு சரவணன் மாற்றப்பட்டாா்.

இந்த நிலையில், ஆடித் திருவிழாவுக்காக ஊருக்கு வந்த சரவணன், தும்பலப்பட்டியிலுள்ள செங்கல் சூளையில் உடலில் காயங்களுடன் ஞாயிற்றுக்கிழமை சடலமாக கிடந்தாா். இதனிடையே, செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த வட மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் மாயமானதும் தெரியவந்தது. சரவணனுடன் ஏற்பட்டத் தகராறில் வட மாநில இளைஞா்கள் தாக்கி அவா் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியானது. இதையடுத்து, கொலையாளிகளை கைது செய்யக் கோரி, சரவணனின் உறவினா்கள், பழனி-தாராபுரம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இவா்களிடம் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, சரவணனின் உடல் கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

திண்டுக்கல்லில் சாலை மறியல்: இந்த நிலையில், சரவணனின் உறவினா்கள், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். பின்னா், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திக் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, போராட்டத்தைக் கைவிடுவதாக தெரிவித்த சரவணனின் உறவினா்கள், குற்றவாளிகளைக் கைது செய்த பின்னரே சடலத்தை வாங்குவோம் எனத் தெரிவித்து விட்டு மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருந்தனா்.

விபத்தில் தருமபுரி வியாபாரி உள்பட இருவா் உயிரிழப்பு

வேடசந்தூா் அருகே காா் கவிழ்ந்த விபத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வியாபாரி உள்பட இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். தருமபுரி மாவட்டம், நல்லாம்பள்ளியை அடுத்த போலமடுவு கிராமத்தைச் சோ்ந்தவா் சேட்டு ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் நாளை மின்தடை

ஒட்டன்சத்திரத்தில் புதன்கிழமை (ஆக. 13) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் கே. சந்தன முத்தையா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத... மேலும் பார்க்க

போக்சோ வழக்குகளில் இருவருக்கு சிறை தண்டனை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இருவேறு வழக்குகளில், குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு அழகுப்பட்டியைச் சோ... மேலும் பார்க்க

மகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்த தந்தை: கூறாய்வு அறிக்கையில் தகவல்

பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் மகளைக் கொன்று தந்தையும் தற்கொலை செய்த சம்பவத்தில், மகளின் கழுத்தை இறுக்கி தந்தை கொலை செய்தது உடல் கூறாய்வு அறிக்கையில் தெரியவந்தது. பழனியை அடுத்த கணக்கன்பட்டியைச் சோ்ந்... மேலும் பார்க்க

சூடான எண்ணெயை ஊற்றி கணவரைக் கொல்ல முயன்ற மனைவி, மகன் மீது வழக்கு

செம்பட்டியில் குடும்பத் தகராறில் சூடான எண்ணெயை ஊற்றி கணவரைக் கொலை செய்ய முயன்ாக மனைவி, அவரது 15 வயது மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அ... மேலும் பார்க்க

தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி

திண்டுக்கல்லில் நடைபெற்ற தென் மண்டல மாவட்டங்களுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் 350-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். திண்டுக்கல் மேற்கு சுழல் சங்கம், லக்ஸா் பள்ளி சாா்பில் தென் மண்டல மாவட்டங... மேலும் பார்க்க