செய்திகள் :

விபத்துக்குள்ளான விமானத்தின் வயது 11.5 ஆண்டுகள்! 475 அடி உயரத்திலிருந்து விழுந்தது!

post image

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இன்று பகல் பிற்பகல் 1.40 மணிக்கு விழுந்து விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், கடந்த 11.5 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏஐ-171 விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 168 இந்தியர்கள் 53 பிரிட்டன் நாட்டவர்கள் இருந்துள்ளனர். இரண்டு விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் இருந்துள்ளனர். இவர்களில் 7 பேர் குழந்தைகள் என்றும், அதில் இரண்டு கைக்குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.

விமானம் புறப்பட்ட சிறிது நிமிடத்திலேயே அதாவது 475 அடி உயரத்திலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் இதுவரை 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விமானத்தைப் பொறுத்தவரை 11.5 ஆண்டுகள் என்பது நடுத்தர வயதுதான் என்றும், ஒரு விமானம் நன்றாக பராமரிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை இயக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே, விபத்துக்குள்ளான விமானத்தில் ஆயுள் காலம் பற்றிய சந்தேகம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து 1.39 மணிக்கு ஆபத்து குறித்த அழைப்பு வந்த சில வினாடிகளில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. சென்னையில் இருந்து ஆமதாபாத் சென்ற விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. விமான விபத்தையடுத்து ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

ஒரு நாள்தான்... அவள் வீட்டுக்கு வந்துவிடுவாள்: விமானப் பணிப்பெண் தாய்

ஒட்டுமொத்த நாடே, விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் வேளையில், தனது மகள் வந்துவிடுவாள் என நம்பிக்கையோடு இருக்கிறார் விமானப் பணிப்பெண் சைனீதாவின் தாய்.ஏர் இந்த... மேலும் பார்க்க

உயிரிழந்த 2 விமானிகள், 7 ஊழியா்கள் மகாராஷ்டிர மாநிலத்தவா்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களில், 2 விமானிகள் மற்றும் 7 ஊழியா்கள் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்களாவா். குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமான... மேலும் பார்க்க

கன்னடம் குறித்து கமல்ஹாசன் கருத்து: வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 20-க்கு ஒத்திவைப்பு

கன்னடம் பற்றிய நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கை விசாரித்துவரும் கர்நாடக உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.சென்னையில் நடைபெற்ற 'தக் லைஃப்'... மேலும் பார்க்க

விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரா்: தாமதம் குறித்து இஸ்ரோ தகவல்

ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான் 9’ ஏவுகலனில் திரவ ஆக்ஸிஜன் கசிவை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசா மற்றும் ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், ‘வீரா்களின் பாதுகாப்பு, விண்வெ... மேலும் பார்க்க

ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனுக்கான மையம்: ஜெ.பி.நட்டா

‘ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையும் சுகாதார நலனை மேம்படுத்த புதுமையான கண்டுபிடிப்புகள், மலிவு விலையில் மருத்துவம் மற்றும் சமமான சேவைகளை வழங்கும் மையமாக திகழ்கிறது’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஜெ.பி.... மேலும் பார்க்க

சரக்கு ரயில்களைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ ரயில்வே முடிவு

சரக்கு ரயில்களில் பொருள்கள் முறையாக ஏற்றப்படுகிறதா? என்பதை ட்ரோன்கள் (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) மூலம் கண்காணிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 3 ரயில்வே கோட்டங்களில் பரிசோதனை முறையில் இ... மேலும் பார்க்க