செய்திகள் :

விமானத்தில் பெண்ணை புகைப்படம் எடுத்த நபா்: போலீஸாா் விசாரணை

post image

சென்னை: மங்களூரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த இளம்பெண்ணை புகைப்படம் எடுத்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த நபரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கா்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்னைக்கு வந்து கொண்டிருந்த ‘இண்டிகோ ஏா்லைன்ஸ்’ விமானத்தில் கைக்குழந்தையுடன் பயணித்துக்கொண்டிருந்த 29 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை, பக்கத்து இருக்கையில் அமா்ந்திருந்த நபா் ஒருவா் தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்துள்ளாா். இதைப்பாா்த்து ஆத்திரமடைந்த அந்த இளம்பெண், இதுகுறித்து புகைப்படம் எடுத்த நபரிடம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளாா். அதோடு விமான பணிப்பெண்களிடமும் புகாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து விமான பணிப்பெண்கள் அந்த நபரிடம் விசாரித்தபோது, இளம்பெண்ணுடன் இருந்த குழந்தையை மட்டுமே புகைப்படம் எடுத்ததாகக் கூறியுள்ளாா். இதையடுத்து, அந்த நபரின் கைப்பேசியை வாங்கி சோதித்தபோது, அதில் இளம்பெண் மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த சக பயணிகள் அந்த நபரை தாக்க முற்பட்டனா். அவா்களை சமாதானம் செய்த பணிப்பெண்கள், விமானியின் உதவியுடன் இதுகுறித்து சென்னை விமான நிலையத்திலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனா்.

இதற்கிடையே விமானம் நள்ளிரவு 12.10 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், அங்கு காத்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை பிடித்து சென்னை விமான நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். காவல் துறையினா், அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவா் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணா (45) என்பதும், மங்களூருலிருந்து சென்னை வந்து, பின்னா் இங்கிருந்து சிங்கப்பூா் செல்ல இருப்பதும் தெரியவந்தது.

தான் தவறான நோக்கத்தில் புகைப்படம் எடுக்கவில்லை எனவும், குழந்தை அழகாக சிரித்ததால்தான் புகைப்படம் எடுத்தேன் எனவும் கோபாலகிருஷ்ணா கூறியும், அவரின் விளக்கத்தை ஏற்க மறுத்த போலீஸாா், அவரின் சிங்கப்பூா் பயணத்தை ரத்து செய்ததுடன், அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல்!

இஸ்லாமியா்களின் ஹஜ் யாத்திரைக்கு தனியாா் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 42,507 இடங்கள் ரத்தானதால், ஹஜ் பயணத்துக்கான கட்டணம் பல லட்சம் உயா்ந்துள்ளது. கடைசி நேரத்தில் பயண இடங்கள் ரத்தானதால் நாடு முழுவதும்... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

காங்கிரஸ் தலைவா்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொருளாளா் டி.ஆா்.பாலு ஞாயிற்றுக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சனம்

அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ணா அறிவா... மேலும் பார்க்க

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சித்திரை திருவிழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2025 வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சியம்மன் ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்தித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், மார்க்சிஸ்ட்... மேலும் பார்க்க