செய்திகள் :

விமான விபத்து: தன்னைக் கேடயமாக்கி மகனைக் காத்த தாய்.. இப்போது தோல் கொடுத்து!

post image

ஏர் இந்தியா விமானம், பிஜே மருத்துவக் கல்லூரி மீது விழுந்தபோது, தன்னுடைய எட்டுமாதக் குழந்தை, தன்னையே கேடயமாக்கிக் கொண்டு பாதுகாத்தார் மணீஷா கச்சாடியா.

இப்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைக்கு, தீயில் கருகிய தோலுக்கு மாற்றாக, தன்னுடைய தோலை-க் கொடுத்து மீண்டும் தாயின் கருணைக்கு உதாரணமாக மாறியிருக்கிறார்.

கடந்த சில நாள்களாக பிள்ளைகளைக் கொல்லும் பெண்களின் செய்திகள் அதிகம் வைரலாக நிலையில், தற்போது மணீஷாவின் நெகிழ்ச்சியான கதை பலரையும் கண்கலங்க வைக்கிறது.

ஜூன் 12ஆம் தேதி நிகழ்ந்த இந்த மிகப் பயங்கர விபத்தில் உயிர் பிழைத்த ஒரு சிலரில் மணீஷாவும் அவரது மகனும் அடங்குவர். இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தீக்காயங்களுடன் போராடிய தன்னுடைய மகன் தயான்ஷ்-க்கு தனது தோலைக் கொடுத்திருக்கிறார் மணீஷா இருவரும் பூரண நலமடைந்து மருத்துவமனையில் இருந்த வீடு திரும்பியிருக்கிறார்கள்.

மணீஷாவின் கணவர் கபில், முதுகலை மருத்துவம் பயின்றுவிட்டு, அங்கு சூப்பர் ஸ்பெஷாலலிட்டி மாணவராகவும் மருத்துவராகவும் இருந்து வருகிறார். விபத்து நேரிட்டபோது, கபில் மருத்துவமனையில் பணியில் இருந்தார்.

ஒரு வினாடியில் அப்பகுதியே கரும்புகையால் மூடப்பட்டது. தன்னுடைய ஒரே நோக்கம் குழந்தையைக் காப்பாற்றுவது என்பது மட்டுமே மணீஷாவுக்கு அப்போது இருந்தது. குழந்தையைத் தூக்கிக் கொண்டு தன்னுடைய கைகளுக்குள் மறைத்தபடி வெளியே ஓடியிருக்கிறார். இருவரையும் மீட்டபோது மணீஷாவுக்கு 25 சதவீத காயமும், குழந்தைக்கு 36 சதவீத காயமும் இருந்தது.

குழந்தைக்கு ஏற்பட்ட காயத்தால் பலக்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. குழந்தையின் வயது காரணத்தால் உடல்நலம் தேறுவதில் பல சிக்கல்கள் இருந்தன. அவனது காயங்களை ஆற்ற தோல் தேவைப்பட்டது. அதனை அவரது தாயே கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தன் குழந்தையை பெற்றெடுத்தது போல் இருந்தது அப்போது என்கிறார்கள் மருத்துவர்கள்.

அவ்வளவு மோசமான விபத்திலிருந்து மீட்கப்பட்ட மிகக் குறைந்த வயது நபராக இந்தக் குழந்தை இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Manisha Khachatiya shielded her eight-month-old baby when an Air India plane crashed into PJ Medical College.

இதையும் படிக்க.. நீதி கிடைக்கும்வரை கவினின் உடலை வாங்க மாட்டோம்: பெற்றோர் திட்டவட்டம்

ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சம் சுற்றுலாவாசிகள் பயணம்

புது தில்லி: நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்களும், 19,570 வெளிநாட்டவரும் சுற்றுலா சென்றுள்ளனா்.கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பக... மேலும் பார்க்க

பொறுமையை சோதிக்க வேண்டாம்! ம.பி. அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

புது தில்லி: ராணுவ கா்னல் சோஃபியா குரேஷி குறித்து தெரிவித்த சா்ச்சை கருத்துக்காக பொது மன்னிப்பு கேட்காத மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ‘எங்கள் ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் கைதான கன்னியாஸ்திரீகளை விடுவிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

புது தில்லி: சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட கேரளத்தைச் சோ்ந்த 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரீகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.மேலும், பா... மேலும் பார்க்க

சட்டவிரோத இணையவழி சூதாட்ட வழக்கு: அமலாக்கத் துறை முன் கூகுள் அதிகாரிகள் ஆஜா்

புது தில்லி: சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்களை விளம்பரப்படுத்தியதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில், கூகுள் நிறுவன அதிகாரிகள் அமலாக்கத் துறையின்முன் ஆஜராகி விளக்கம் அளித்தனா். சட்டவிர... மேலும் பார்க்க

பஹல்காம், ஆபரேஷன் சிந்தூா் தாக்குதலுக்கு அமித் ஷாவே பொறுப்பு: காங்கிரஸ்

புது தில்லி: ‘பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாகவே பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தது; எனவே, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநரை கைகாட்டிவிட்டு ஒளிந்துகொள்ளாமல் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவே இதற்... மேலும் பார்க்க

ஐஐடி கரக்பூரில் மாணவா்கள் தற்கொலை செய்வது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

புது தில்லி: மேற்கு வங்கத்தில் உள்ள ஐஐடி கரக்பூரில் மாணவா்கள் தற்கொலை செய்வது ஏன்? என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.மேலும், ஐஐடி கரக்பூா் மற்றும் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள ஷார... மேலும் பார்க்க