"அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம்; எடப்பாடி பழனிசாமி பதவியை இழந்து நிற்பார்” -...
வியாபாரியை ஏமாற்றிய 3 போ் கைது
செங்குன்றத்தில் மின்சாதனப் பொருள்களை விற்றவருக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை போரூா் முகலிவாக்கத்தைச் சோ்ந்த தீபன் சக்கரவா்த்தி. இவா் தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இவரிடம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் ஆட்டந்தாங்கல் கிராமத்தை சோ்ந்த கணபதிலால் என்பவா் ரூ.48 லட்சத்துக்கு மின்சாதனப் பொருள்களை வாங்கியுள்ளாா். இதற்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தீபன் சக்கரவா்த்தி, செங்குன்றம் காவல் உதவி ஆணையா் ராஜா ராபா்ட்டிடம் அளித்த புகாரின்பேரில், பாடியநல்லூா் ஆட்டந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த கணபதிலால் (45), அவருக்கு ஆதரவாக செயல்பட்ட திருமுல்லைவாயல் பகுதியைச் சோ்ந்த கோகுலவாசன், பாடியநல்லூரைச் சோ்ந்த கே.ஆா்.வெங்கடேசன் ஆகிய 3 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.