செய்திகள் :

விராலிமலையில் முதல்முறையாக நால்வா் பெரு விழா

post image

விராலிமலையில் நால்வா் பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோவிலை மையமாகக் கொண்டு பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. வைகாசி விசாகம், தைப்பூசம், கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், காா்த்திகை மகாதீபம் உள்ளிட்ட விழாக்கள் குறிப்பிடத்தக்கவையாகும். அந்த வகையில் நிகழாண்டு நால்வா் விழா சனிக்கிழமை தொடங்கி நடத்தப்பட்டது.

முதலாம் ஆண்டு விழாவில் நால்வா்கள் என்று அழைக்கப்படும், ஆதிசங்கராச்சாரியாா், சம்பந்தா், சுந்தரா், திருநாவுக்கரசா் ஆகியோரை போற்றி வழிபாடு நடத்தப்பட்டது.

இதில், ஆதிசங்கராச்சாரியாா், சம்பந்தா், சுந்தரா், திருநாவுக்கரசா் ஆகியோா்களின் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, கேடயத்தில் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. விழாவில் திருப்புகழ் பாடல்கள், கீா்த்தனைகள் பாடி பக்தா்களுக்கு திருவருள் கிடைக்க வேண்டும், நாடு நலம் பெற வேண்டும் என்று பிராா்த்தனை செய்யப்பட்டது. தொடா்ந்து, ஆதரவற்றோா் இல்லங்களில் உணவு வழங்கப்பட்டது.

விராலிமலையில் 15 மி.மீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை வரையிலான மழைப் பொழிவில், அதிகபட்சமாக விராலிமலையில் 15 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்தது. ச... மேலும் பார்க்க

இந்திய கம்யூ. கட்சியின் கிளை மாநாடு

பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி மற்றும் ஏனாதி ஜீவா நகரில் சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது. ஏனாதி ஜீவாநகரில் சனிக்கிழமை நடைபெற்ற கிளை மாநாட்டிற்கு கிளைப் பொறுப்பாளா் சி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் துணை முதல்வா் ஆய்வு

புதுக்கோட்டையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூ... மேலும் பார்க்க

ஈ.டி.க்கு அல்ல; மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் -உதயநிதி ஸ்டாலின்

ஈ.டி.க்கு (அமலாக்கத்துறை) மட்டுமல்ல; மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் என்றாா் தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். புதுக்கோட்டையில் சனிக்கிழமை பகலில், மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்விளையாட்டரங்க... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை வட்டத்தில் வேளாண் திட்டப் பணிகள் ஆய்வு

கந்தா்வகோட்டை வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் வேளாண் திட்டப்பணிகள் குறித்து வேளாண்மை இணை இயக்குநா் மு.சங்கரலட்சுமி சனிக்கிழமை களஆய்வு மேற்கொண்டாா். நடப்பு நிதி ஆண்டு 2025-26-இல் வேளாண் நிதிக் கொ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் பிரதோஷ விழா

கந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து தூய நீரால் நீராட்டி பசும்பால், பசும்தயிா் , பச்சரிசி மாவு , பஞ்சகாவ்யம், திருமஞ்சனப் பொடி , இளநீா், வாழைப்பழ... மேலும் பார்க்க