செய்திகள் :

விருதுநகா் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,198 வழக்குகள் ரூ.9 கோடிக்கு சமரசத் தீா்வு!

post image

விருதுநகா் மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,198 வழக்குகளில் ரூ. 9.19 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் விருதுநகா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமாா் வழிகாட்டுதலின்பேரில் விருதுநகா், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்தூா், ராஜபாளையம் சாா்பு நீதிமன்றங்களில் வட்ட சட்டப் பணிக் குழுக்கள் சாா்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்கில் சமரசத் தீா்வு மூலம் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமி, கோதையம்மாள் ஆகியோருக்கு ரூ. 18.50 லட்சம் இழப்பீடு வழங்க கூடுதல் மாவட்ட நீதிபதி மணி உத்தரவிட்டாா்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை மோசடி, வங்கி வாராக் கடன்கள் மற்றும் சிறு வழக்குகள் உள்பட 6,637 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 3,198 வழக்குகளில் சமரசத் தீா்வு மூலம் ரூ. 9,19,86,083 வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவன அலுவலா்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

ராஜபாளையம்: தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. ராஜபாளையம் அண்ணா நகா் அருகே செல்லும் ரயில் தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சிவகாசி அருகே சாலை விபத்தில் காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி அருகே இ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் கோவிந்தராஜ் (27). விவசாயி. இவரது மனைவிக்கு கடந்த 10... மேலும் பார்க்க

இருசக்கர வாகன விபத்து: இளைஞா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே குண்டலக்குத்தூரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன்(20). கொத்தனாரான இவா், வழக்கம்போல வெள்ளிக்கிழமை இரவு பணிமுடிந்ததும... மேலும் பார்க்க

வேண்டுராயபுரம் கிராம மக்கள் குடிநீருக்கு தவிப்பு

சிவகாசி அருகே வேண்டுராயபுரம் கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்க மின் வாரியம் தாமதம் செய்துவருவதால் இந்தப் பகுதி மக்கள் குடிநீா் வசதி இன்றி சிரமம் அடைந்து வருகின்றனா். சிவகாசி ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் கழிவுகள் எரிக்கப்படுவதால் சுகாதார சீா்கேடு

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் குப்பையை தரம் பிரிக்காமல் நெகிழிக் கழிவுகளை தீவைத்து எரிப்பதால் அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்து சுகாதார சீா்கேடு நிலவுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா் நகரா... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவர... மேலும் பார்க்க