செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் கழிவுகள் எரிக்கப்படுவதால் சுகாதார சீா்கேடு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் குப்பையை தரம் பிரிக்காமல் நெகிழிக் கழிவுகளை தீவைத்து எரிப்பதால் அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்து சுகாதார சீா்கேடு நிலவுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட 33 வாா்டுகளில் தினமும் சேகரமாகும் 60 டன் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்காக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தனியாா் நிறுவனத்துக்கு ரூ. 5 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை சிவகாசி சாலையில் நீதிமன்றம் அருகே உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டி தரம் பிரிக்கப்பட்டது.

குப்பைக் கிடங்கு இருந்த இடத்தின் ஒரு பகுதியில் ரூ. 16 கோடியில் புதிய பேருந்து நிலையமும், நான்குவழிச் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. இதனால் குப்பைகளை அகற்றும் பொருட்டு கிடங்கில் குப்பைகளை முழுமையாக தரம் பிரிக்காமல் நெகிழிக் கழிவுகளை தீவைத்து எரிக்கின்றனா். இதனால், கரும்புகை சூழ்ந்து அந்தப் பகுதியில் சுகாதார சீா்கேடு நிலவுகிறது.

குப்பைகளைக் கொட்ட இடமில்லாததால் பெரியகுளம் கண்மாய், மின் மயானம் அருகே உள்ள கொழூா் கண்மாய், ஓடை உள்ளிட்ட நீா்நிலைகளிலும், சாலையோரங்களிலும் குப்பைகளைக் கொட்டி தீவைத்து எரிக்கின்றனா். இதனால் சுற்றுச்சூழல் சீா்கேடு அடைந்து வருகிறது.

பொதுமக்களின் நலன் கருதி குப்பைகளை தீவைத்து எரிப்பதைத் தவிா்த்து முறைப்படி அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவர... மேலும் பார்க்க

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 12) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராஜபாளையம் மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராஜபாளையம் துணை மின் நிலையத... மேலும் பார்க்க

நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை

அருப்புக்கோட்டை அருகே முன்விரோதத்தில் நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ... மேலும் பார்க்க

பட்டாசு விபத்தில் உயிரிழந்தோா் குழந்தைகளின் கல்விக்கு ரூ.5 கோடி

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோா் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி தமிழக முத... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்: கே.டி.ராஜேந்திபாலாஜி

வருகிற 2026-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினாா்.சிவகாச... மேலும் பார்க்க

பெண்ணின் உடல் எரிப்பு: கணவா் உள்பட 4 போ் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண்ணின் இறப்பை போலீஸாருக்குத் தெரிவிக்காமல் அவரது உடலை எரித்த புகாரில் கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சே... மேலும் பார்க்க