பெண்ணின் உடல் எரிப்பு: கணவா் உள்பட 4 போ் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண்ணின் இறப்பை போலீஸாருக்குத் தெரிவிக்காமல் அவரது உடலை எரித்த புகாரில் கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் வலையா் வடக்குத் தெருவை சோ்ந்தவா் தவசி. இவரது மகள் கலையரசி (33). கலையரசி கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரைப் பிரிந்த நிலையில், தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியைச் சோ்ந்த முருகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாா்.
முருகன், மலையரசி இருவரும் மம்சாபுரம் தட்டப்பாறை பகுதியிலுள்ள அய்யனாருக்குச் சொந்தமான தோட்டத்தில் தங்கியிருந்து விவசாய வேலை செய்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த மே 15-ஆம் தேதி தவசியை கைப்பேசியில் தொடா்பு கொண்ட முருகன், கலையரசி இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
மறுநாள் காலை தவசி உறவினா்களுடன் வந்த போது, கலையரசியின் உடலை இரவோடு இரவாக எரித்தது தெரியவந்தது. இதுகுறித்து தவசி மம்சாபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதுதொடா்பாக மம்சாபுரம் போலீஸாா் முருகன், காளிமுத்து, முனியாண்டி, வைரமுத்து ஆகிய 4 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.