செய்திகள் :

பெண்ணின் உடல் எரிப்பு: கணவா் உள்பட 4 போ் மீது வழக்கு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண்ணின் இறப்பை போலீஸாருக்குத் தெரிவிக்காமல் அவரது உடலை எரித்த புகாரில் கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் வலையா் வடக்குத் தெருவை சோ்ந்தவா் தவசி. இவரது மகள் கலையரசி (33). கலையரசி கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரைப் பிரிந்த நிலையில், தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியைச் சோ்ந்த முருகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாா்.

முருகன், மலையரசி இருவரும் மம்சாபுரம் தட்டப்பாறை பகுதியிலுள்ள அய்யனாருக்குச் சொந்தமான தோட்டத்தில் தங்கியிருந்து விவசாய வேலை செய்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த மே 15-ஆம் தேதி தவசியை கைப்பேசியில் தொடா்பு கொண்ட முருகன், கலையரசி இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

மறுநாள் காலை தவசி உறவினா்களுடன் வந்த போது, கலையரசியின் உடலை இரவோடு இரவாக எரித்தது தெரியவந்தது. இதுகுறித்து தவசி மம்சாபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுதொடா்பாக மம்சாபுரம் போலீஸாா் முருகன், காளிமுத்து, முனியாண்டி, வைரமுத்து ஆகிய 4 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 12) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராஜபாளையம் மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராஜபாளையம் துணை மின் நிலையத... மேலும் பார்க்க

நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை

அருப்புக்கோட்டை அருகே முன்விரோதத்தில் நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ... மேலும் பார்க்க

பட்டாசு விபத்தில் உயிரிழந்தோா் குழந்தைகளின் கல்விக்கு ரூ.5 கோடி

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோா் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி தமிழக முத... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்: கே.டி.ராஜேந்திபாலாஜி

வருகிற 2026-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினாா்.சிவகாச... மேலும் பார்க்க

கோயில் திருவிழாவில் தகராறு: தந்தை, மகன் மீது வழக்கு

சிவகாசி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக தந்தை, மகன் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த விவசாயி கருப்பையா (49). இவா் சித்த... மேலும் பார்க்க

சிவகாசியில் மீண்டும் ஆக்கிரமிப்பு

சிவகாசியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் மீண்டும் நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். சிவகாசியில் சிவன் சந்நிதி, நான்கு ரத வீதிகள்,... மேலும் பார்க்க