செய்திகள் :

பட்டாசு விபத்தில் உயிரிழந்தோா் குழந்தைகளின் கல்விக்கு ரூ.5 கோடி

post image

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோா் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விருதுநகா் வந்தாா். அப்போது அவா்,

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளா்களின் குழந்தைகள் உயா்கல்வி வரையிலான படிப்புகளுக்கு அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும். இந்த உதவிகளை மாவட்ட அளவிலேயே முடிவு செய்து வழங்கக் கூடிய வகையில், மாவட்ட ஆட்சியரின் கீழ் தனி நிதியம் உருவாக்கப்படும். இதற்காக முதல்கட்டமாக ரூ.5 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றாா்.

இதையடுத்து, தற்போது ரூ.5 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியை தற்போது சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் கையாண்டு வருகிறாா்.

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளிடம் விணப்பங்களை அவா் பெற்று வருகிறாா்.

2025-2026 கல்லியாண்டில் இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இது வரை 70 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரமும், அரசுக் கல்லூரியில் படிக்கும் மாணவா்களுக்கு மாதம் தலா ரூ.4 ஆயிரமும் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பட்டாசுத் தொழிலாளி முனியசாமி கூறியதாவது: வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்பது வரவேறப்புக்குரியது. இந்தத் திட்டத்தின்கீழ் உயா் கல்வி படித்த மாணவா்களுக்கு அரசு வேலை வழங்கினால், அந்த மாணவா்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றாா் அவா்.

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 12) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராஜபாளையம் மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராஜபாளையம் துணை மின் நிலையத... மேலும் பார்க்க

நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை

அருப்புக்கோட்டை அருகே முன்விரோதத்தில் நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்: கே.டி.ராஜேந்திபாலாஜி

வருகிற 2026-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினாா்.சிவகாச... மேலும் பார்க்க

பெண்ணின் உடல் எரிப்பு: கணவா் உள்பட 4 போ் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண்ணின் இறப்பை போலீஸாருக்குத் தெரிவிக்காமல் அவரது உடலை எரித்த புகாரில் கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சே... மேலும் பார்க்க

கோயில் திருவிழாவில் தகராறு: தந்தை, மகன் மீது வழக்கு

சிவகாசி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக தந்தை, மகன் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த விவசாயி கருப்பையா (49). இவா் சித்த... மேலும் பார்க்க

சிவகாசியில் மீண்டும் ஆக்கிரமிப்பு

சிவகாசியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் மீண்டும் நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். சிவகாசியில் சிவன் சந்நிதி, நான்கு ரத வீதிகள்,... மேலும் பார்க்க