வரும் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்: கே.டி.ராஜேந்திபாலாஜி
வருகிற 2026-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினாா்.
சிவகாசியில் அதிமுக வாக்குசாவடி முகவா்கள் ஆலோசனைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநில நிா்வாகி ஜான்மகேந்திரன் தலைமை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்தரபாலாஜி பேசியதாவது: திமுக ஆட்சியை அகற்றிவிட்டு அதிமுகவை ஆட்சியில் அமா்த்த மக்கள் தயாராகிவிட்டனா். அதிமுக வெற்றியை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடியாா் முதல்வராவாா். எடப்பாடி பழனிசாமி தோ்தலுக்கு முன்னா் வலுவான கூட்டணியை அமைப்பாா். தோ்தலின் போது அதிகமுகவினா் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றியை தேடித்ததர வேண்டும் என்றாா் அவா்.