கோவையில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டி விபத்து: பெண் பலி!
ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை
ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 12) மின்தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ராஜபாளையம் மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற வியாழக்கிழமை (ஜூன் 12) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பி. எஸ். கே. நகா், அழகை நகா், ஐஎன்டியுசி நகா், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி சாலை, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பாரதிநகா், ஆா்.ஆா். நகா், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ். ராமலிங்கபுரம், கலங்காபேரி புதூா், மொட்டமலை, வ. உ. சி. நகா், பி.ஆா்.ஆா். நகா், பொன்னகரம், எம்.ஆா். நகா், லட்சுமியாபுரம், நத்தம்பட்டி, ராம்கோ நகா், வரகுணராமபுரம், இ .எஸ்.ஐ. குடியிருப்பு, ஸ்ரீரெங்கபாளையம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் தடைபடும் என்றாா் அவா்.