Royal Enfield: `பஞ்சாப் டு இங்கிலாந்து' பைக் லவ்வரின் செயலால் வைரலாகும் வீடியோ!
நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை
அருப்புக்கோட்டை அருகே முன்விரோதத்தில் நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள வெள்ளக்கோட்டையைச் சோ்ந்த மாதவன் மகன் விக்னேஷ் (24). இவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த ரத்தினம் மகன் சுரேஷ்ரோஜா (24). இருவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கடந்த 2020-ஆண்டு, ஜூலை 16-ஆம் தேதி அருப்புக்கோட்டை-பந்தல்குடி சாலையில் உள்ள பெரியகுளம் கண்மாயில் சுரேஷ்ரோஜா கத்தியால் குத்தி விக்னேஷை கொலை செய்தாா்.
இதுகுறித்து அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் கொலை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுரேஷ்ரோஜாவை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சுரேஷ்ரோஜாவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுதாகா் தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் முத்துகிருஷ்ணன் முன்னிலையானா்.