ஈரானில் அணுசக்தி தளவாடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: வான்வெளி 3-ஆவது நாளா...
ராஜபாளையம்: தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
ராஜபாளையம் அண்ணா நகா் அருகே செல்லும் ரயில் தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
உயிரிழந்த நபா் யாா் எனத் தெரியவில்லை. குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் ரயிலில் அந்த நபா் அடிபட்டு இறந்திருக்கலாம் என ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா். சிமெண்ட் வண்ண பேண்ட், கருப்பு
வெள்ளை கோடு போட்ட அரைக்கைச் சட்டை அணிந்திருந்தாா். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.