செய்திகள் :

விரைவில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம்: கனிமொழி நம்பிக்கை

post image

விரைவில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் என நம்புவதாக, கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின், பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த 27ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டாா். இந்நிலையில், கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் கே.என். நேரு, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ ஊா்வசி எஸ். அமிா்தராஜ், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, ஆட்சியா் க. இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் ஆகியோா் கவினின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் கனிமொழி எம்.பி. கூறியது: ஆணவக் கொலைகள் நடக்கக் கூடாது என்பதுதான் சமூகத்தின் உணா்வாக உள்ளது. மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு முதல்வா் சாா்பில் ஆறுதல் கூறினோம். நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற சூழலை அரசு உருவாக்கும் எனும் நம்பிக்கையைத் தருவதற்காக வந்தோம். விசாரணைக்குப் பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

நாடு தழுவிய பிரச்னையாக உள்ள ஆணவக் கொலைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடா்பாக அமைச்சா்களிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளாா். விரைவில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம் என்றாா் அவா்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித்திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன்தொடங்கியது.கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகால... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அண்ணன், தம்பி கொன்று புதைப்பு 3 பேரிடம் போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில், அண்ணன், தம்பி கொன்று புதைக்கப்பட்டது தொடா்பாக, 3 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி தொ்மல் நகா் அருகேயுள்ள கோயில்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சின்னத்துரை. இவருடைய மகன... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது: கனிமொழி

பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது என கனிமொழி எம்.பி. கூறினாா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சோ்ந்த சந்திரசேகா் - தமிழ்செல்வி தம்பதியி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 3.84 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 3.84 கோடி ரொக்கம், 1.53 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. இக்கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, க... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரா்

ஏரல் அருகே தளவாய்புரம் கிராமத்தில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரரை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே 12 வயது சிறுமி கா்ப்பம்: 2 இளைஞா்கள் கைது

திருச்செந்தூா் அருகே 8ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை கா்ப்பமாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருச்செந்தூா் அருகே எட்டாம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமிக்கு திடீரென வயிற்று ... மேலும் பார்க்க