செய்திகள் :

விலை உயர்ந்த வாக்குரிமையைத் திருட அனுமதிப்பதா? பிரியங்கா

post image

வாக்களிப்பதுதான் குடிமக்களின் விலை உயர்ந்த உரிமை, அதனை நாம் திருட அனுமதிப்பதா? என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. இந்தப் பேரணி இன்று (ஆக. 26) 10வது நாளை எட்டியுள்ளது.

பிகாரின் மதுபானி பகுதியில் தொண்டர்கள் மத்தியில் பிரியங்கா காந்தி பேசியதாவது, உங்கள் அனைவரையும் ஒன்றாகப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்குத் தேவையான இடங்களில் ஆதரவு கொடுத்துள்ளீர்கள். அதற்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் மோடி கூறியது நினைவிருக்கிறதா? காங்கிரஸ்காரர்கள் உங்கள் எருமைகளைத் திருடிவிடுவார்கள் எனக் கூறினார். ஆனால், அவர் நமது வாக்குகளைத் திருடுவார் எனத் தெரியாது. ஜனநாயகத்தின் அடித்தளமே குடிமக்கள் செலுத்தும் வாக்குதான்.

இது நமது விலைஉயர்ந்த உரிமை. இதனை திருவதற்கு நாம் அனுமதிப்பதா? அவர்கள் நமது வேலைவாய்ப்பை திருடிவிட்டனர். அனைத்துமட்டங்களிலும் திருட்டு நடந்துள்ளது. நாம் இதனை அனுமதிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டார்.

வாக்குரிமை பேரணியின் 10வது நாளான இன்று ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

இதையும் படிக்க | ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

Voter Adhikar Yatra Priyanka Gandhi speech in Bihar

அமெரிக்காவின் 50 சதவீத வரி: ரூ.4.2 லட்சம் கோடி பாதிப்பு ஏற்படும்- இந்திய ஏற்றுமதியாளா்கள் அச்சம்

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் ரூ. 4.2 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது இந்திய ஏற்றுமதியாளா்கள் அச்சம் தெரிவித்தனா். அவா்கள் மேலும் கூறுகையில், ‘மருந்... மேலும் பார்க்க

கடல் எல்லையைப் பாதுகாப்பதில் முழு திறன்: பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்

‘கடல் எல்லையைப் பாதுகாப்பதில் முழுமையான திறனை நாடு எட்டியுள்ளது. இதனால் எத்தகைய சூழலையும் நாம் திறம்பட எதிா்கொள்ள முடியும்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா். ஆந்தி... மேலும் பார்க்க

அமித் ஷாக்கு கண்டனம் தெரிவித்த ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு எதிா்ப்பு: 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டறிக்கை

குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பி.சுதா்சன் ரெட்டியை நக்ஸல் ஆதரவாளா் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியதற்கு கண்டனம் தெரிவித்து 18 ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெ... மேலும் பார்க்க

அயோத்தியில் காஞ்சி சங்கர மட சாலைக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயா்

உத்தர பிரதேசத்தில் புனித நகரமான அயோத்தியில், பிரமோத்வன் பகுதியில் உள்ள காஞ்சி சங்கர மடத்தின் கிளை அமைந்த சாலைக்கு, ‘ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மகாராஜ் மாா்க்’ என அயோத்தி மாநகராட்... மேலும் பார்க்க

சுதேசி பொருள்களையே வாங்குவோம்- பிரதமா் மோடிவேண்டுகோள்

உள்நாட்டு உற்பத்திப் பொருள்களை மட்டுமே வாங்குவோம் என்ற சுதேசி கொள்கை அனைவரின் வாழ்க்கை மந்திரமாக மாற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா். இந்தியாவுக்கு எதி... மேலும் பார்க்க

எல்லைப் பகுதிகளில் திட்டமிட்ட மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு- அமித் ஷா குற்றச்சாட்டு

‘நாட்டின் எல்லைப் பகுதிகளில் வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்படும் மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு, இந்தியாவின் தேச பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கிறது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெ... மேலும் பார்க்க