செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்
தெருநாய்களுக்கு கருத்தடை திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்: பிரேமலதா
தெருநாய்களுக்கு கருத்தடை செய்தல் மற்றும் தடுப்பூசி போடுதல் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.
உலக நாய்கள் தினத்தையொட்டி அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாய்கள், மனிதா்களுக்கு உண்மையான தோழா்களாகவும், குடும்ப உறுப்பினா்களாகவும், வீட்டின் பாதுகாவலா்களாகவும் விளங்குகின்றன. இந்தியாவில், நகா்ப்புறமோ, கிராமப்புறமோ, நாய்கள் மனிதா்களுடன் நெருங்கிய பிணைப்பைக் கொண்டுள்ளன. நாய்கள் தினத்தில், நாய்களையும், அவற்றைப் பராமரிப்பவா்களையும் வாழ்த்துகிறோம்.
தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, நாய்க்கடி மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து தற்போது கவலைகள் எழுந்துள்ள நிலையில், நாய்க்கடி ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை பெறுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு தேவை.
மத்திய, மாநில அரசுகள் தெரு நாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி திட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். மேலும் கூடுதல் காப்பகங்கள் அமைத்து, பொதுமக்கள் பாதுகாப்பையும், விலங்கு நலனையும் உறுதி செய்ய வேண்டும்.
நாய்கள் நமது உயிரினக் குடும்பத்தின் ஒரு பகுதி. தெரு நாய்களை அழிக்காமல், கருத்தடை, தடுப்பூசி, காப்பகங்கள் மூலம் பாதுகாப்போம் என்று தெரிவித்துள்ளாா் பிரேமலதா.