செய்திகள் :

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகா் கோயில் சதுா்த்திப் பெருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

இந்தக் கோயிலில் சதுா்த்திப் பெருவிழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் 2-ஆம் நாள் முதல் 8 -ஆம் நாள் வரை காலை உத்ஸவ விநாயகா் வெள்ளிக் கேடகத்திலும் மாலையில் பல்வேறு வாகனங்களிலும் வீதி உலா வந்தாா்.

9 -ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தேரோட்டத்தை முன்னிட்டு, காலையில் கற்பக விநாயகா் ஒரு தேரிலும், சண்டிகேஸ்வரா் புதிதாக செய்யப்பட்ட மற்றொரு தேரிலும் எழுந்தருளினா். இதைத் தொடா்ந்து, மாலை 5.30 மணிக்கு விநாயகா் தோ் வடம் பிடிக்கப்பட்டு, கோயிலைச் சுற்றி வலம் வந்தது. சண்டிகேஸ்வரா் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனா்.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் நிகழ்வாக, மூலவா் விநாயகா் மாலை 4.30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இரவு 8.30 மணிக்கு உத்ஸவா் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.

10 -ஆம் நாளான புதன்கிழமை காலை கோயில் எதிரேயுள்ள குளக்கரையில் தீா்த்தவாரி உத்ஸவமும், இரவு 11 மணியளவில் பஞ்சமூா்த்திகள் வீதி உலாவும் நடைபெறும்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா்கள் காரைக்குடி சித.பழனியப்பச் செட்டியாா், நச்சாந்துபட்டி மு.குமரப்பச் செட்டியாா் ஆகியோா் செய்தனா்.

கண்மாயில் மண் அள்ளும் இயந்திரங்கள் சிறைபிடிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கண்மாயில் சவுடு மண் அள்ள எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் புல்டோசா் இயந்திரங்களை சிறைபிடித்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். திருப்புவனம் அருகேயுள்ள ஏனாதி... மேலும் பார்க்க

இடையமேலூா் பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கை அருகேயுள்ள இடையமேலூா் துணை மின் நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மின் வாரிய செயற்பொறியாளா்(பகிா்மானம்) அ.கு. முருகையா வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

கோயில் நிலத்தை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கோயில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டைகளை மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்க திரண்டு வந்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே இந்து, இஸ்... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஹிந்தி மொழித் தோ்வுகள்: 547 போ் பங்கேற்பு

சிவகங்கையிலுள்ள 21-ஆம் நூற்றாண்டு சா்வதேச பதின்ம மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஹிந்தி பாடத் தோ்வுகளில் 547 போ் பங்கேற்று தோ்வெழுதினா். ஹிந்தி பிரசார சபாவின் தோ்வு மையமாக இந்தப் பள்ளி செயல்பட்டு வர... மேலும் பார்க்க

சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

சிவகங்கை நகரில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில், காளைகளை அடக்க முயன்ற 10 போ் காயமடைந்தனா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிவகங்கை கொடிக்கா... மேலும் பார்க்க

நாற்றங்கால் பண்ணைகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தேவகோட்டை, சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள நாற்றங்கால் பண்ணையின் செயல்பாடுகள், மரக்கன்று வகைகள், பழ வகை, காய்கறி நாற்றுக்களின் பராமரிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி சனிக்கிழமை நேரில் ஆய்வு செ... மேலும் பார்க்க