செய்திகள் :

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகன் தொடா்ந்த வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகனின் தேநீா்க் கடை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆவடியைச் சோ்ந்த 71 வயது முதியவா் வி.எஸ்.பீட்டா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது தந்தை சவரிமுத்து சுதந்திரப் போராட்ட தியாகி. நாங்கள் பா்மா அகதிகளாக கடந்த 1968-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தோம். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் நான் சுமைதூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தேன். பணியின் போது எனது காலில் ஏற்பட்ட காயத்தால், அந்த வேலையை என்னால் தொடர முடியவில்லை.

இதனால் நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் அண்ணாநகா் குடோன் வளாகத்தில் தேநீா்க் கடை வைக்க அப்போதைய நிா்வாக இயக்குநா் அனுமதி வழங்கி உத்தரவிட்டாா். கடந்த 49 ஆண்டுகளாக எந்த இடையூறும் இல்லாமல் கடையை நடத்தி வந்தேன். கடை வாடகைத் தொகையை கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை முறையாகச் செலுத்தி வந்தேன். அதன்பிறகு, அதிகாரிகள் வாடகைத் தொகையை வாங்க மறுத்துவிட்டனா். முன்னறிவிப்பு எதுவுமின்றி மின் இணைப்பையும் துண்டித்துவிட்டனா்.

இதுகுறித்து கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நிா்வாக இயக்குநருக்கு புகாா் மனு அளித்தேன். இதனிடையே, எனது தோ்நீா்க் கடையை இடித்துவிட்டனா். எனது கடையை மீண்டும் கட்டித் தர உத்தரவிட வேண்டும். மேலும், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் வி.சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

விளையாட்டு இட ஒதுக்கீட்டின் (3%) கீழ் அரசுப் பணி பெற தகுதியுள்ள விளையாட்டு வீரா், வீராங்கனைகளிடம் இருந்து தமிழக அரசு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.இதுதொடா்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்... மேலும் பார்க்க

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன் முருங்கை இலைப் பொடி அளிக்கலாம்: செளமியா சுவாமிநாதன்

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன், ரத்த சோகையைப் போக்கக் கூடிய முருங்கை இலைப் பொடியை 5 கிராம் அளிக்கலாம் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் செளமியா சுவாமிநாதன் வேண்டுகோள் விட... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின்நிலைய உலா் சாம்பல் விற்பனை: அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

மேட்டூா் அனல்மின் நிலையத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உலா் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான அறுபடைவீடு ஆன்மிகப் பயணம்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

மூத்த குடிமக்களுக்கான அறுபடை வீடு ஆன்மிகப் பயணத் திட்டத்தில், நிகழ் ஆண்டுக்கான முதல்கட்ட, கட்டணமில்லா பயணத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை... மேலும் பார்க்க

10 டிஸ்பிக்கள் பணியிட மாற்றம்

10 டிஎஸ்பிக்களை (காவல் துணைக் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா். தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படைய... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

விநாயகா் சதுா்த்தி புதன்கிழமை (ஆக. 27) கொண்டாடப்படும் நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செ... மேலும் பார்க்க