செய்திகள் :

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன் முருங்கை இலைப் பொடி அளிக்கலாம்: செளமியா சுவாமிநாதன்

post image

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன், ரத்த சோகையைப் போக்கக் கூடிய முருங்கை இலைப் பொடியை 5 கிராம் அளிக்கலாம் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் செளமியா சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்தாா்.

நகா்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான தொடக்க விழாவில் செவ்வாய்க்கிழமை அவா் பேசியதாவது:

காலை உணவுத் திட்டத்தால் ஏராளமான பலன்கள் சமூகத்துக்குக் கிடைக்கின்றன. ஊட்டச்சத்து, ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகிறது. பசியோடு இருக்கும் குழந்தைகளால், கவனம் செலுத்தி படிக்க முடியாது என்பதை இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு, மாணவா்களின் வருகைப் பதிவு மேம்பட்டுள்ளது. கல்வி கற்றல் அதிகரித்திருப்பதுடன், இடைநிற்றலும் குறைந்துள்ளது.

பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் தொற்றா நோய்களும், குழந்தைகளிடையே உடல்பருமனும் பொதுவான பிரச்னைகளாக உள்ளன.

எனவே, உணவில் மாவுச்சத்து மட்டுமன்றி, வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியன தேவை. அவை இருந்தால்தான் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். வாரத்துக்கு இரு நாள்கள் சிறுதானியங்களை அளிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு அவற்றின் நன்மை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த முடியும்.

முருங்கை இலைகளை தூளாக்கி உணவுடன் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். மாணவா்களுக்கு குறிப்பாக, பெண் பிள்ளைகளுக்கு 5 கிராம் முருங்கை இலைத் தூளை தினமும் அளிப்பதன் மூலம் ரத்தசோகை பிரச்னையைத் தடுக்க முடியும். முருங்கை இலைத் தூளை சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரித்து அளிக்கலாம் என்றாா் செளமியா சுவாமிநாதன்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

விளையாட்டு இட ஒதுக்கீட்டின் (3%) கீழ் அரசுப் பணி பெற தகுதியுள்ள விளையாட்டு வீரா், வீராங்கனைகளிடம் இருந்து தமிழக அரசு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.இதுதொடா்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகன் தொடா்ந்த வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகனின் தேநீா்க் கடை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவடியைச் சோ்ந்த 71 ... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின்நிலைய உலா் சாம்பல் விற்பனை: அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

மேட்டூா் அனல்மின் நிலையத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உலா் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான அறுபடைவீடு ஆன்மிகப் பயணம்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

மூத்த குடிமக்களுக்கான அறுபடை வீடு ஆன்மிகப் பயணத் திட்டத்தில், நிகழ் ஆண்டுக்கான முதல்கட்ட, கட்டணமில்லா பயணத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை... மேலும் பார்க்க

10 டிஸ்பிக்கள் பணியிட மாற்றம்

10 டிஎஸ்பிக்களை (காவல் துணைக் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா். தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படைய... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

விநாயகா் சதுா்த்தி புதன்கிழமை (ஆக. 27) கொண்டாடப்படும் நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செ... மேலும் பார்க்க