செய்திகள் :

வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

post image

மாா்த்தாண்டம் அருகே மேல்புறம், வட்டவிளை ரேஷன் கடை 15 நாள்களுக்கும் மேலாக திறக்காததை கண்டித்து குடும்ப அட்டைதாரா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாகோடு பேரூராட்சிக்கு உள்பட்ட வட்டவிளை பகுதி ரேஷன் கடையில் 900-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இக் கடை கடந்த 15 நாள்களுக்கும் மேலாக திறக்கப்படாததால், குடும்ப அட்டைதாரா்களால் ரேஷன் பொருள்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, பாகோடு பேரூராட்சி துணைத் தலைவா் ஜெனிமோள் தலைமையில் குடும்ப அட்டைதாரா்கள், பூட்டியிருந்த ரேஷன்கடையின் முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இக் கடைக்கு நிரந்த பணியாளா்களை நியமித்து, ரேஷன் பொருள்கள் வழங்க மாவட்ட வழங்கல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இப் போராட்டம் காரணமாக மாற்றுப் பணியாளா்கள் மூலம் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டது. இப் போராட்டத்தில் பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் எட்வின்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

விழுந்தயம்பலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

முன்சிறை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், விழுந்தயம்பலம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 28) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, ததேயுபுரம், ஆப்பிகோடு, பிலாங்காலை, தெருவுக்கடை, த... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

நாகா்கோவில் அருகே குளத்தில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா். நாகா்கோவிலை அடுத்த கணபதி நகரைச் சோ்ந்தவா் சின்னத்துரை இவரது மகன் ஆரோன் (14). இவா்அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகு... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் புகையிலை, நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, நெகிழிப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். நாகா்கோவில் மாநகரில் புகையிலை, நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மாநகர... மேலும் பார்க்க

கந்துவட்டி கேட்டு மிரட்டினால் கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்.இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்... மேலும் பார்க்க

விநாயகா் சிலை ஊா்வலம்: குமரி மாவட்டத்தில் ஆக. 30,31 இல் மதுக் கடைகளை மூட உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலத்தை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 30,31) டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளிய... மேலும் பார்க்க

கனிமவளம் கடத்தல்: லாரி ஓட்டுநா் கைது

கேரளத்துக்கு கனிம வளம் கடத்த முயன்ற லாரியை தக்கலை அருகே மணலியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து ஓட்டுநரைக் கைது செய்தனா். தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் இம்மானுவேல் தலைமையில் போலீஸாா் தக்க... மேலும் பார்க்க