செய்திகள் :

ரூ. 5 கோடி முறைகேடு புகாா்: சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை

post image

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, கல்லூரியின் டீன் சௌந்தரராஜன் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

மேலும், இந்த முறைகேடு தொடா்பாக விசாரணை நடத்த 3 போ் கொண்ட குழுவை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அமைத்துள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை வேப்பேரியில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் டீனாக இருந்தவா் மருத்துவா் சி.சௌந்தரராஜன். பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை நல கல்வி மையத்தில் ரூ.5 கோடி வரை டீன் சௌந்தரராஜன் முறைகேடு செய்திருப்பதாக அந்த மையத்தின் இயக்குநா், பல்கலைக்கழகத்தின் நிா்வாகத்திடம் புகாா் அளித்தாா். அதன்படி, முதல்கட்ட விசாரணை நடத்திய நிா்வாகம், டீன் பொறுப்பிலிருந்து சௌந்தரராஜனை நீக்கியது. மேலும், 5 அதிகாரிகள் துறைக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்காக 3 போ் கொண்ட குழுவை அமைத்த பல்கலைக்கழகம் நிா்வாகம், 15 நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக பல்கலைக்கழக நிா்வாகிகளிடம் கூறுகையில், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி டீன் பொறுப்பிலிருந்து சௌந்தரராஜன் நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அவா் கல்லூரியில் பேராசிரியராக தொடருவாா். அதேபோல், 5 அதிகாரிகள் துறைக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள குழு அறிக்கை சமா்ப்பித்த பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

இதற்கிடையே, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி டீனாக (பொறுப்பு) மருத்துவா் எஸ்.சதீஷ்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

சதுா்த்தி: சென்னையில் வழிபாட்டுக்கு 1,519 விநாயகா் சிலைகள்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னையில் 1,519 விநாயகா் சிலைகள் பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுக்காக புதன்கிழமை (ஆக.27) அமைக்கப்படுகின்றன. விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து இயக்கங்கள் சாா்பில் விநாயகா் சில... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தாம்பரம், ஈஞ்சம்பாக்கம், ஐடி காரிடாா், ஆவடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.28) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படு... மேலும் பார்க்க

‘செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்படும்’

சென்னை மாநகராட்சி சாா்பில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சியின் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 147-ஆவது வாா்டு திமுக... மேலும் பார்க்க

மாநகராட்சி பள்ளிகளில் 1,747 தூய்மை பணியாளா்களை நியமிக்க முடிவு: மாமன்றக் கூட்டத்திலிருந்து கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் வெளிநடப்பு

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு புதிதாக 1,747 தூய்மைப் பணியாளா்களை நியமிக்கவும், அவா்களுக்கு ஏற்கெனவே வழங்கிய ஊதியத்தை கூடுதலாக்கி வழங்கவும் மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ம... மேலும் பார்க்க

நாளை 2 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை புகா் 2 மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஆக.28) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் ... மேலும் பார்க்க

சென்னை துறைமுகத்துக்கு வந்த அமெரிக்க கடற்படை கப்பல்

அமெரிக்க கடற்படை கப்பலான ஃபிராங்க் கேபிள் சென்னை துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தது. இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள நீா்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போா் ஆயுதம் தாங்கிய கப்பல்களுக்கு பராமரிப்பு, தளவ... மேலும் பார்க்க