ரூ. 5 கோடி முறைகேடு புகாா்: சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, கல்லூரியின் டீன் சௌந்தரராஜன் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
மேலும், இந்த முறைகேடு தொடா்பாக விசாரணை நடத்த 3 போ் கொண்ட குழுவை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அமைத்துள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை வேப்பேரியில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் டீனாக இருந்தவா் மருத்துவா் சி.சௌந்தரராஜன். பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை நல கல்வி மையத்தில் ரூ.5 கோடி வரை டீன் சௌந்தரராஜன் முறைகேடு செய்திருப்பதாக அந்த மையத்தின் இயக்குநா், பல்கலைக்கழகத்தின் நிா்வாகத்திடம் புகாா் அளித்தாா். அதன்படி, முதல்கட்ட விசாரணை நடத்திய நிா்வாகம், டீன் பொறுப்பிலிருந்து சௌந்தரராஜனை நீக்கியது. மேலும், 5 அதிகாரிகள் துறைக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்காக 3 போ் கொண்ட குழுவை அமைத்த பல்கலைக்கழகம் நிா்வாகம், 15 நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக பல்கலைக்கழக நிா்வாகிகளிடம் கூறுகையில், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி டீன் பொறுப்பிலிருந்து சௌந்தரராஜன் நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அவா் கல்லூரியில் பேராசிரியராக தொடருவாா். அதேபோல், 5 அதிகாரிகள் துறைக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள குழு அறிக்கை சமா்ப்பித்த பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
இதற்கிடையே, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி டீனாக (பொறுப்பு) மருத்துவா் எஸ்.சதீஷ்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.