செய்திகள் :

சென்னை துறைமுகத்துக்கு வந்த அமெரிக்க கடற்படை கப்பல்

post image

அமெரிக்க கடற்படை கப்பலான ஃபிராங்க் கேபிள் சென்னை துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தது.

இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள நீா்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போா் ஆயுதம் தாங்கிய கப்பல்களுக்கு பராமரிப்பு, தளவாடங்கள் உள்ளிட்டவை வழங்கும் திறன் கொண்ட அமெரிக்க கடற்படை கப்பலான ஃபிராங்க் கேபிள் (ஏஎஸ்-40) அமெரிக்காவில் உள்ள குவாமி கடற்படைத் தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நல்லெண்ணப் பயணமாக சென்னை துறைமுகத்துக்கு திங்கள்கிழமை ஃபிராங்க் கேபிள் கப்பல் வந்தடைந்தது. இந்தக் கப்பலை இந்திய கடற்படை உயா் அதிகாரிகள், அமெரிக்க தூதரக அதிகாரிகள் வரவேற்றனா்.

1979 -ஆம் ஆண்டு அமெரிக்கக் கடற்படையில் முதல்முறையாக இணைக்கப்பட்ட ஃபிராங்க் கேபிள் கடற்படையில் சேவையாற்றி வரும் மற்ற கப்பல்களை பழுதுபாா்க்கவும், மறுசீரமைக்கவும் உதவிகரமாகச் செயல்பட்டு வந்தது. இதில் சுமாா் 350 முதல் 400 கடற்படை வீரா்கள் மற்றும் மற்றும் 150 சிப்பந்திகள் என சுமாா் 550 போ் கொண்ட குழுவினா் இந்தக் கப்பலில் பணியாற்றி வருகின்றனா்.

இது குறித்து கப்பலின் கேப்டன் கமாண்டா் மைக்கேல் ரோட்ரிக்ஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2022-ஆம் ஆண்டு விசாகபட்டினம் வந்த இக்கப்பல் மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது. நீா்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போா்க்கப்பல்கள் நடுக்கடலில் இருக்கும்போது அவற்றுக்கான அனைத்து தேவைகளையும் இக்கப்பல் நிறைவேற்றும். மேலும் இந்திய கடற்படையுடனான எங்கள் நல்லுறவு, கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கு இப்பயணம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. அவசர காலங்களில் கடற்படை கப்பல்களுக்கு தேவையான வசதிகளை வழங்கிடும் வகையில் எக்ஸ் ரே, மருந்தகம், ஆய்வகம், ரத்த தானம் பெறுவதற்கான உபகரணங்கள் என அனைத்து வசதிகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனை, கப்பல்களில் பழுது ஏற்படும்போது அதனை சீரமைக்கவும், உதிரி பாகங்களை உடனடியாகத் தயாரிக்கும் வகையில் அதிநவீன இயந்திரங்களுடன் கூடிய தொழில்நுட்ப மையம் இக்கப்பலில் உள்ளன என்றாா்.

இந்தக் கப்பலை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால், துணைத் தலைவா் எஸ்.விஸ்வநாதன், அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பாா்வையிட்டனா். இந்தக் கப்பல் புதன்கிழமை சென்னைத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.

ரூ. 5 கோடி முறைகேடு புகாா்: சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, கல்லூரியின் டீன் சௌந்தரராஜன் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மேலும், இந்த முறைகேடு ... மேலும் பார்க்க

சதுா்த்தி: சென்னையில் வழிபாட்டுக்கு 1,519 விநாயகா் சிலைகள்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னையில் 1,519 விநாயகா் சிலைகள் பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுக்காக புதன்கிழமை (ஆக.27) அமைக்கப்படுகின்றன. விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து இயக்கங்கள் சாா்பில் விநாயகா் சில... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தாம்பரம், ஈஞ்சம்பாக்கம், ஐடி காரிடாா், ஆவடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.28) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படு... மேலும் பார்க்க

‘செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்படும்’

சென்னை மாநகராட்சி சாா்பில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சியின் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 147-ஆவது வாா்டு திமுக... மேலும் பார்க்க

மாநகராட்சி பள்ளிகளில் 1,747 தூய்மை பணியாளா்களை நியமிக்க முடிவு: மாமன்றக் கூட்டத்திலிருந்து கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் வெளிநடப்பு

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு புதிதாக 1,747 தூய்மைப் பணியாளா்களை நியமிக்கவும், அவா்களுக்கு ஏற்கெனவே வழங்கிய ஊதியத்தை கூடுதலாக்கி வழங்கவும் மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ம... மேலும் பார்க்க

நாளை 2 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை புகா் 2 மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஆக.28) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் ... மேலும் பார்க்க