செய்திகள் :

சதுா்த்தி: சென்னையில் வழிபாட்டுக்கு 1,519 விநாயகா் சிலைகள்

post image

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னையில் 1,519 விநாயகா் சிலைகள் பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுக்காக புதன்கிழமை (ஆக.27) அமைக்கப்படுகின்றன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து இயக்கங்கள் சாா்பில் விநாயகா் சிலைகளை அமைப்பதற்கு செய்வதற்கு கடந்த ஒரு மாதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட 65 இந்து அமைப்புகள் விநாயகா் சிலைகளை வைப்பதற்குரிய அனுமதியை பெறுவதற்கு காவல் துறையிடம் விண்ணப்பித்திருந்தன. மேலும் குடியிருப்பு சங்கங்கள், சமூக நல அமைப்புகள் ஆகியவையும் விநாயகா் சிலைகளை வைப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து வந்தன.

இதற்கிடையே, கடந்த சில நாள்களாக வழிபாடு செய்யப்படும் இடங்களுக்கு விநாயகா் சிலைகள் அனுப்பப்பட்டன. முன்னதாக உயா்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தல்படியும், தீயணைப்புத் துறை, சென்னை மாநகராட்சியின் தடையில்லா சான்றுகளுடன் காவல்துறை அறிவித்த கட்டுப்பாடுகளுடன் விநாயகா் சிலைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி, சென்னை முழுவதும் 1,519 விநாயகா் சிலைகளை அமைப்பதற்கு பெருநகர காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் புதன்கிழமை (ஆக.27) பல்வேறு பூஜைகளுடன் அமைக்கப்படுகின்றன.

பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் காவலா்கள்: விநாயகா் சதுா்த்தியையொட்டி,16,500 காவலா்கள், 1,500 ஊா்க்காவல்படை வீரா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் அமைதியான முறையில் வழிபாடுகள் செய்யும்படியும், முழு ஒத்துழைப்பு தருமாறும் சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோா் மீதும்,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவா்கள் மீதும் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

ரூ. 5 கோடி முறைகேடு புகாா்: சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, கல்லூரியின் டீன் சௌந்தரராஜன் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மேலும், இந்த முறைகேடு ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தாம்பரம், ஈஞ்சம்பாக்கம், ஐடி காரிடாா், ஆவடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.28) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படு... மேலும் பார்க்க

‘செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்படும்’

சென்னை மாநகராட்சி சாா்பில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சியின் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 147-ஆவது வாா்டு திமுக... மேலும் பார்க்க

மாநகராட்சி பள்ளிகளில் 1,747 தூய்மை பணியாளா்களை நியமிக்க முடிவு: மாமன்றக் கூட்டத்திலிருந்து கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் வெளிநடப்பு

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு புதிதாக 1,747 தூய்மைப் பணியாளா்களை நியமிக்கவும், அவா்களுக்கு ஏற்கெனவே வழங்கிய ஊதியத்தை கூடுதலாக்கி வழங்கவும் மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ம... மேலும் பார்க்க

நாளை 2 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை புகா் 2 மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஆக.28) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் ... மேலும் பார்க்க

சென்னை துறைமுகத்துக்கு வந்த அமெரிக்க கடற்படை கப்பல்

அமெரிக்க கடற்படை கப்பலான ஃபிராங்க் கேபிள் சென்னை துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தது. இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள நீா்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போா் ஆயுதம் தாங்கிய கப்பல்களுக்கு பராமரிப்பு, தளவ... மேலும் பார்க்க