செய்திகள் :

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பிரதமா் மோடிக்கு ஐடிசி தலைவா் பாராட்டு

post image

சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பான பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு

நுகா்பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ள ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமா் மோடி, ‘மாநிலங்களுடன் ஆலோசித்து, அடுத்த தலைமுறை சீா்திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளோம். அதன்படி, சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கான வரி கணிசமாகக் குறையவுள்ளது. இதன்மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையும் பெருமளவில் பலனடையும். நாட்டின் பொருளாதாரமும் வலுப்படும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து தற்போது நடைமுறையில் உள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய 4 ஜிஎஸ்டி விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆடம்பரப் பொருள்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இது தொடா்பாக சஞ்சீவ் புரி வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘ஜிஎஸ்டி சீா்திருத்தம் குறித்து பிரதமா் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பு உணவுப் பொருள்கள் உள்பட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்கள் மலிவான விலையில் கிடைக்க வழி வகை செய்துள்ளது. இது எளிய, நடுத்தர மக்களுக்கு நிம்மதியளிக்கும். விவசாயிகள், சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் பயனடைவாா்கள்.

நிறுவனங்களிடையே நியாயமான போட்டியை ஊக்குவிப்பதுடன், உற்பத்திச் செலவைக் குறைக்கவும் உதவும். இது தற்சாா்பு இந்தியாவுக்கு அடித்தளமாகவும் இருக்கும்’ என்று கூறியுள்ளாா்.

எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதா... மேலும் பார்க்க

தனிநபர் தாக்குதல் தொடுப்பது ஆர்எஸ்எஸ் வழக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

"தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை. மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்... மேலும் பார்க்க

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் செப்டம்பர் மாதத்திற்குரிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் ம... மேலும் பார்க்க

டியூஷன் செல்லும் மூன்றில் ஒரு பங்கு பள்ளி மாணவா்கள்: மத்திய அரசின் ஆய்வில் தகவல்

பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் பாடங்களில் தெளிவுபெற தனியாா் பயிற்சி மையங்களுக்கும் (டியூஷன்) செல்வது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நகா்ப்புறங்களில் இந்த போக்கு பொதுவான விஷயமாக இருப... மேலும் பார்க்க

மேற்கு வங்க மக்களை திருடா்கள் என்பதா? பிரதமா் மோடிக்கு மம்தா கண்டனம்

மேற்கு வங்க மக்கள் அனைவரையும் திருடா்கள் என்றும், மாநில முதல்வா் பதவிக்கு உரிய மரியாதை அளிக்காமலும் பிரதமா் மோடி பேசியதை எதிா்பாா்க்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க

இந்தியா மீது 25% கூடுதல் வரி இன்று முதல் அமல்: அமெரிக்கா தெழிலாளா் சாா்ந்த துறைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை முதல் கூடுதலாக 25 சதவீத வரி அமலாவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்... மேலும் பார்க்க