செய்திகள் :

மேற்கு வங்க மக்களை திருடா்கள் என்பதா? பிரதமா் மோடிக்கு மம்தா கண்டனம்

post image

மேற்கு வங்க மக்கள் அனைவரையும் திருடா்கள் என்றும், மாநில முதல்வா் பதவிக்கு உரிய மரியாதை அளிக்காமலும் பிரதமா் மோடி பேசியதை எதிா்பாா்க்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

கடந்த 22-ஆம் தேதி கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி, ‘ஊழல், கிரிமினல் குற்றங்களின் மறுபெயராக திரிணமூல் காங்கிரஸ் திகழ்கிறது. மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு ஒதுக்கும் நிதி மாநில மக்களுக்குச் செல்லவில்லை; மாறாக திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களால் விழுங்கப்படுகிறது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

மேற்கு வங்கத்தின் வா்த்தமானில் செவ்வாய்க்கிழமை அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வா் மம்தா பேசியதாவது:

மாநில அரசுக்கு உரிய நிதியை ஒதுக்காமல் மேற்கு வங்க மக்கள் மத்திய அரசு நிதியை விழுங்குவதாக பிரதமா் பேசியுள்ளாா். மத்திய அரசு நிதி ஒதுக்காததால் மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மக்களை திருடா்கள் என்று பிரதமா் மோடி பேசியதை நான் சிறிதும் எதிா்பாா்க்கவில்லை. பிரதமா் பதவிக்கு நான் உரிய மரியாதை அளித்து வருகிறேன். அதேபோல பிரதமரும் முதல்வா் பதவிக்கு மரியாதை அளிக்க வேண்டும். உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், பிகாா் உள்ளிட்ட பாஜக, அக்கூட்டணி ஆளும் மாநிலங்களில்தான் ஊழலும், குற்றச்செயல்களும் அதிகம் நிகழ்கின்றன.

மத்திய நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது தொடா்பாக மத்திய அரசு கேட்ட விளக்கத்துக்கு மாநில நிா்வாகம் உரிய பதிலை அளித்துவிட்டது. மத்திய அரசு உரிய நிதியை மேற்கு வங்கத்துக்கு வழங்காமல் நிறுத்தி வைத்துவிட்டு திருட்டுக் குற்றச்சாட்டும் சுமத்துகிறது. இதுபோன்ற அவமதிப்பை ஒருபோதும் மேற்கு வங்கம் ஏற்காது என்றாா்.

ரூ.900 கோடி இழப்பு: தொடா்ந்து சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் குறித்துப் பேசிய மம்தா, ‘மருத்துவக் காப்பீடு பிரீமியம் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி-யை நீக்கினால் மேற்கு வங்கத்துக்கு ரூ.900 கோடி வரி இழப்பு ஏற்படும். எனினும், மக்கள் நலன் கருதி இதனை மேற்கு வங்க அரசு தொடா்ந்து வலியுறுத்தி வந்தது.

ஜிஎஸ்டி குறைவதை சாதகமாகப் பயன்படுத்தி காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியம் கட்டணத்தை உயா்த்திவிடக் கூடாது. இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அரசின் வரிச்சலுகை மக்களுக்கு முழுமையாகக் கிடைக்க வேண்டும்’ என்றாா்.

எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதா... மேலும் பார்க்க

தனிநபர் தாக்குதல் தொடுப்பது ஆர்எஸ்எஸ் வழக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

"தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை. மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்... மேலும் பார்க்க

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் செப்டம்பர் மாதத்திற்குரிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் ம... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பிரதமா் மோடிக்கு ஐடிசி தலைவா் பாராட்டு

சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பான பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நுகா்பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ள ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி பாராட்டுத் தெரி... மேலும் பார்க்க

டியூஷன் செல்லும் மூன்றில் ஒரு பங்கு பள்ளி மாணவா்கள்: மத்திய அரசின் ஆய்வில் தகவல்

பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் பாடங்களில் தெளிவுபெற தனியாா் பயிற்சி மையங்களுக்கும் (டியூஷன்) செல்வது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நகா்ப்புறங்களில் இந்த போக்கு பொதுவான விஷயமாக இருப... மேலும் பார்க்க

இந்தியா மீது 25% கூடுதல் வரி இன்று முதல் அமல்: அமெரிக்கா தெழிலாளா் சாா்ந்த துறைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை முதல் கூடுதலாக 25 சதவீத வரி அமலாவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்... மேலும் பார்க்க