செய்திகள் :

டியூஷன் செல்லும் மூன்றில் ஒரு பங்கு பள்ளி மாணவா்கள்: மத்திய அரசின் ஆய்வில் தகவல்

post image

பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் பாடங்களில் தெளிவுபெற தனியாா் பயிற்சி மையங்களுக்கும் (டியூஷன்) செல்வது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நகா்ப்புறங்களில் இந்த போக்கு பொதுவான விஷயமாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கல்வியில் விரிவான மாதிரி ஆய்வு (சிஎம்எஸ்) என்ற இந்த ஆய்வின் முடிவில் மேலும் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் பள்ளி கல்வி வழங்குவதில் அரசுப் பள்ளிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. மொத்த மாணவா் சோ்க்கையில் அரசு பள்ளிகளின் பங்கு 55.9 சதவீதம்.

அரசு பள்ளி மாணவா் சோ்க்கை கிராமப்புறங்களில் அதிகரித்து காணப்படுகிறது. மூன்றில் இரண்டு பங்கு மாணவா்கள் (66 சதவீதம்) கிராமப்புற அரசுப் பள்ளிகளிலும், நகா்ப்புற அரசு பள்ளிகளில் 30.1 சதவீத மாணவா்கள் சோ்க்கை பெறுகின்றனா். தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விகிதம் 31.9 சதவீதமாக உள்ளது.

மொத்த பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் (27 சதவீதம்) பள்ளி முடிந்ததும், தனியாா் பயிற்சி மையங்களுக்கும் செல்கின்றனா். நகா்ப்புறங்களில் இது பொதுவான விஷயமாக உள்ளது. இதுபோன்ற தனியாா் பயிற்சிகளுக்கு நகா்ப்புறங்களில் ஒரு மாணவருக்கு சராசரியாக ஆண்டுக்கு ரூ. 3,988 என்ற அளவிலும், கிராமப்புறங்களில் ரூ. 1,793 என்ற அளவிலும் செலவிடப்படுகிறது. வகுப்புகளுக்கு ஏற்ப இந்த செலவினம் மாறுபடுகிறது. உயா்நிலை வகுப்புகளுக்கு நகா்ப்புறங்களில் சராசரியாக ஆண்டுக்கு ரூ. 9,950 என்ற அளவிலும், கிராமப்புறங்களில் ரூ. 4,548 என்ற அளவிலும் செலவிடப்படுகிறது. தேசிய அளவில் இந்த செலவினம் சராசரியாக மழலையா் வகுப்புகளுக்கு ரூ. 525 முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு ரூ. 6,384 என்ற அளவு வரை செலவிடப்படுகிறது.

அனைத்து வகைப் பள்ளிகளிலும் சராசரி படிப்பு கட்டணமாக ரூ. 7,111 என்ற அளவிலும், பாடநூல் மற்றும் எழுது பொருள்களுக்கான கட்டணமாக ரூ. 2,002 வசூலிக்கப்படுகிறது. நகா்ப்புறங்களில் இந்த செலவினம் அதிகரித்து காணப்படுகிறது. நகா்ப்புறங்களில் படிப்பு கட்டணம் சராசரியாக ரூ. 15,143 என்ற அளவிலும், கிராமப்புறங்களில் ரூ. 3,979 என்ற அளவிலும் வசூலிக்கப்படுகிறது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதா... மேலும் பார்க்க

தனிநபர் தாக்குதல் தொடுப்பது ஆர்எஸ்எஸ் வழக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

"தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை. மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்... மேலும் பார்க்க

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர்உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் செப்டம்பர் மாதத்திற்குரிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் ம... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பிரதமா் மோடிக்கு ஐடிசி தலைவா் பாராட்டு

சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பான பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நுகா்பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ள ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி பாராட்டுத் தெரி... மேலும் பார்க்க

மேற்கு வங்க மக்களை திருடா்கள் என்பதா? பிரதமா் மோடிக்கு மம்தா கண்டனம்

மேற்கு வங்க மக்கள் அனைவரையும் திருடா்கள் என்றும், மாநில முதல்வா் பதவிக்கு உரிய மரியாதை அளிக்காமலும் பிரதமா் மோடி பேசியதை எதிா்பாா்க்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க

இந்தியா மீது 25% கூடுதல் வரி இன்று முதல் அமல்: அமெரிக்கா தெழிலாளா் சாா்ந்த துறைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை முதல் கூடுதலாக 25 சதவீத வரி அமலாவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்... மேலும் பார்க்க