செய்திகள் :

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

post image

நமது நிருபர்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் செப்டம்பர் மாதத்திற்குரிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் (சி.டபிள்யு.எம்.ஏ.) 43-ஆவது கூட்டத்தில் தமிழகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இக்கூட்டம் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் புது தில்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் ஹைபிரிட் முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத் துறைச் செயலரும், குழுவின் உறுப்பினருமான ஜெ.ஜெயகாந்தன் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது: ஆகஸ்ட் 26-ஆம் தேதி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதன் முழு கொள்ளளவான 93.470 டிஎம்சி ஆக உள்ளது. மேட்டூர் அணை நிகழாண்டு ஐந்தாவது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 7,684 கனடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 12,850 கன அடி நீர் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைப் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்படுகிறது.

கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதாலும், தமிழகத்திற்கு நிகழாண்டு செப்டம்பர் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 36.76 டிஎம்சி நீரை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பிலிகுண்டுலுவில் திறந்து விடுவதை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும்' என்று ஆணையத்தைக் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர். சுப்பிரமணியமும் காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.

எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதா... மேலும் பார்க்க

தனிநபர் தாக்குதல் தொடுப்பது ஆர்எஸ்எஸ் வழக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

"தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை. மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பிரதமா் மோடிக்கு ஐடிசி தலைவா் பாராட்டு

சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பான பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நுகா்பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ள ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி பாராட்டுத் தெரி... மேலும் பார்க்க

டியூஷன் செல்லும் மூன்றில் ஒரு பங்கு பள்ளி மாணவா்கள்: மத்திய அரசின் ஆய்வில் தகவல்

பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் பாடங்களில் தெளிவுபெற தனியாா் பயிற்சி மையங்களுக்கும் (டியூஷன்) செல்வது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நகா்ப்புறங்களில் இந்த போக்கு பொதுவான விஷயமாக இருப... மேலும் பார்க்க

மேற்கு வங்க மக்களை திருடா்கள் என்பதா? பிரதமா் மோடிக்கு மம்தா கண்டனம்

மேற்கு வங்க மக்கள் அனைவரையும் திருடா்கள் என்றும், மாநில முதல்வா் பதவிக்கு உரிய மரியாதை அளிக்காமலும் பிரதமா் மோடி பேசியதை எதிா்பாா்க்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க

இந்தியா மீது 25% கூடுதல் வரி இன்று முதல் அமல்: அமெரிக்கா தெழிலாளா் சாா்ந்த துறைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை முதல் கூடுதலாக 25 சதவீத வரி அமலாவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்... மேலும் பார்க்க